Header image alt text

கட்சி நிகழ்வுகள், அறிவித்தல்கள்

சுவிஸில் “புளொட்” அமைப்பின் சார்பில், “29 வது வீரமக்கள் தினம்” நிகழ்வு..!! (அறிவித்தல்)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ்கிளை சார்பில், எதிர்வரும் 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை மதியம் 02.30 க்கு சுவிஸ் சூரிச் மாநகரில் உள்ள Unter Affoltern மண்டபத்தில் (GZ Affoltern, Bodenacker -25, 8046 Affoltern Zürich) நடைபெறவுள்ள “29 வது வீரமக்கள் தினம்” நிகழ்வில் சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேற்படி நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக போராடடத்தில் தமது இன்னுயிரை ஈர்ந்த “அனைவருக்குமான அஞ்சலி” நிகழ்வு இடம்பெறும். மலரஞ்சலி, மௌனஞ்சலி ஆகியவற்றினைத் தொடர்ந்து..,

மாணவர்களின் விநோத உடைப் போட்டி, நடன நாட்டியங்கள், நாடகங்கள், பட்டிமன்றம் (பட்டிமன்றம்.. “முகநூல் பதிவுகள் மற்றும் பகிர்வுகள் மக்களுக்கு பயனுள்ளதா? பாதிப்பானதா??”) விருந்தினர்கள் உரை, மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை அன்றையதினம் காலை 08.00 மணிக்கு, இதே மண்டபத்தில் நடைபெறவுள்ள “அறிவுத்திறன் போட்டியில்” இதுவரை பதிவு செய்யாத மாணவர்களும் நேரில் வந்து தம்மை பதிவு செய்து விட்டு மேற்படிப்பு பரீடசையில் கலந்து கொள்ள முடியும் என்பதையும் அறியத் தருகிறோம்.

சுவிஸ் வாழ் அனைத்துத் தமிழ் பேசும் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு.. ;
077.9485214, 078.9167111, 078.6461681,079.7333539, 079.9401982, 079.9297719, 079.2104566, 076.4454112,

இவ்வண்ணம்..
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சுவிஸ்கிளை.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்ப்) சுவிஸ்கிளை.

தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள் (2018) சூறிச் மாநிலத்தில்…

அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே!

தமிழீழ மக்கள் கல்விக்கழகம் (08.07.2018 அன்று காலை 08.00 மணிக்கு) சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி ஒன்றை நிகழ்த்தி அதில் பங்குபற்றும் பிள்ளைகளில் திறமைசாலிகளைத் தெரிவு செய்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்முயிரை அர்ப்பணித்த அனைவரையும் நினைவு கூருமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினரால் அன்றையதினம் பிற்பகல், அதே மண்டபத்தில் நிகழ்த்தப்படவிருக்கும் 29வது வீரமக்கள் தினத்தில் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதுடன் பங்குபற்றும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.
சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்ற வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இங்கு வாழும் தமிழ்ப்பிள்ளைகளின் தமிழ் அறிவு வளர்ச்சிக்கு உதவியும், ஊக்கமும் அளிப்பதே எமது நோக்கமாகும்.

*** போட்டிகள் 08.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 08,00 மணிக்கு GZ Affoltern, Bodenacker 25, 8046 Zürich-Affoltern என்ற இடத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெறும்.

*** உங்கள் விண்ணப்பப்படிவம் அனுப்பி வைக்கப்பட வேண்டிய முகவரி
PEOT, Postfach 357, 3414 Oberburg.
அல்லது/or: ploteswiss@gmail.com

தொடர்புகட்கு:-
077.9485214, 078.9167111, 078.6461681, 079.7333539, 079.9401982, 079.9297719, 076.4454112, 079.2104566

Leave a Reply