11.05.2013.

மாகாணசபை அதிகாரங்கள் வேண்டுமென கோரிக்கை-

untitled13ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்ததில் மாகாண சபைகளுக்காக வழங்கப்பட்ட பொலீஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இரத்து செய்யப்படக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக் கோரிக்கையினை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்;சியான சிறீலங்கா கமியூனிஸ்ட் கட்சி விடுத்துள்ளது. இந்த அதிகாரங்கள் இரத்து செய்யப்பட்டு அரசியலமைப்பு சீர்த்திருத்தப்படுமானால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கட்சியின் பிரதி பிரதான செயலாளர் எஸ் சுதசிங்க தெரிவித்துள்ளார். மாகாண சபைகளை வலுப்படுத்துவதற்காக மேலும் பல அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இதேவேளை, வட மாகாண சபை தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்பட வேண்டும் எனவும் சிறீலங்கா கமியூனிஸ்ட் கட்சியின் பிரதி பிரதான செயலாளர் எஸ் சுதசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரத் தீர்மானம்-

jaffnaவட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1983ம் ஆண்டுமுதல் 2009ம் ஆண்டு மேமாதம் வரையில் வடக்கு வாக்காளர் இடாப்பில் பதிவுசெய்து கொண்டவர்கள், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. வாக்காளராக தங்களை பதிவு செய்து கொள்ளவும், வாக்களிக்கவும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது, வேறு மாவட்டங்களில் தங்களை பதிவு செய்து கொள்ளாதவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. 15ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் புத்தளத்தில் தங்கியிருப்பதாகவும் அவர்களும் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கந்தரோடையில் சேற்று நீர் விநியோகம்-

kanthயாழ். சுன்னாகம் கந்தரோடைப் பகுதிக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையால் வழங்கப்படும் குழாய் மூலமான நீர் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லையென அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.  கடந்த ஒருவார காலமாக மிகவும் கலங்கிய நிலையில் சேற்றுநீராக குழாய்மூலம் தண்ணீர் வருவதால் குழாய் நீரைப் பயன்படுத்துகின்ற 250ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட குழாய் நீர்மூலம் தண்ணிர் பெறுவதில் உள்ள பிரச்சினை சம்பந்தமாக உடுவில் பிரதேச செயலகத்தின் கவனத்திற்கும் மற்றும் உடுவில் பிரதேச சபைக்கும் பொதுமக்கள் கொண்டுவந்துள்ளனர். அத்துடன் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரசபையின் யாழ். அலுவலகத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளார்கள்.

வாக்காளர் பதிவேட்டு திருத்தத்திற்கு விண்ணப்பம்-

election box2013ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவேட்டில் திருத்தம் மேற்கொள்வதற்கான மாதிரி விண்ணப்பப் படிவங்களை இந்த மாதம் 15ஆம் திகதிமுதல் பெற்றுக்கொள்ள முடியுமென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சில வாக்காளர்கள் தங்களை பதிவு செய்துகொள்வதில் அக்கறை செலுத்துவதில்லை என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய, வாக்காளர்களை தெளிவுபடுத்துவதற்கான விசேட திட்டமொன்று இம்முறை முன்னெடுக்கப்படவுள்ளது. வாக்காளர் பதிவேட்டு திருத்தப் பணிகளை மேற்கொள்வதில் சுமார் ஒருவருட காலம் கடந்துள்ளது. இந்நிலையில் பணிகளை மேலும் துரிதப்படுத்துவதற்கு இம்முறை கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.எல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாந்தை கிழக்கு பிரதான வீதி திருத்தப்படாமையால் மக்கள் சிரமம்

mullai roadவீதி அபிவிருத்தி நடவடிக்கைகளின் கீழ் நாட்டிலுள்ள பல வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகிற போதிலும் சில கிராமங்களின் பிரதான வீதிகள் இன்னமும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்குப் பிரதேசத்திற்குச் செல்லும் பிரதான வீதி 30 வருடங்களுக்கும் மேலாக திருத்தப்படாத நிலையில் உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால், அன்றாட போக்குவரத்து நடவடிக்கைகளின்போது பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இடையிடையே சிறியளவிலான திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மீண்டும் இப் பிரதான வீதி சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஜனாதிபதி உகண்டாவிற்கு விஜயம்-

mahintha[1]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு உகண்டா சென்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தனது விஜயத்தின்போது உகண்டா ஜனாதிபதி யோவரி முசவேனி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. உகண்டாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய உள்ளுர் அரசாங்க மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அங்கு சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது. உகண்டா ஜனாதிபதி யோவெரி முசெவெனியை சந்திக்கவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் செப்டெம்பரில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கவுள்ளார்.