24.05.2013.

பொதுநலவாய பிரதிநிதி வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு-

Commonwealtபொதுநலவாய நாடுகளின் வர்த்தகப் பேரவையின் தலைவர் பீற்றர் கலகானுக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸூக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இம் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் தரப்புகள் தொடர்பிலும் இதன்போது விரிவான பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

ஒருதொகுதி இலங்கையர்கள நாடு கடத்தல்-

Australia[1]புகலிடம் கோரி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த மேலும் 16 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்படவுள்ளனர். அவுஸ்திரேலியாவின் சட்டதிட்டங்களுக்கு முகங்கொடுக்கத் தவறிய 16பேரே இவ்வாறு நாடு கடத்தப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையில் ஆயிரத்து 177 இலங்கை அகதிகள் நாடு கடத்தப்பட்டதாகவும், அவர்களில் 966 பேர் சுய விருப்பின்பேரில் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாகவும் பிரன்டன் ஒ கொன்னர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் அதிகாரம் வழங்கினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்-கோத்தபாய-

Kothabayaமாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசஅதிகாரி என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவது எனது கடமையாகும். எனினும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதா அல்லது இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என்பதுடன், புலனாய்புப் பிரிவினர் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதநிலை ஏற்படும். இவ்விடயம் பற்றி அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

 நாடு கடத்தப்படவிருந்த அகதிகளுக்கு சட்ட உதவி-

australienஅவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த இரு இலங்கை அகதிகள், சட்டத்தரணிகளை அனுகுவதற்கு அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இந்த இரு இலங்கையர்களுடன் மேலும் 12பேர் வௌ;வேறு நாடுகளுக்கு நாடுகடத்தப்படவிருந்தனர். இந்நிலையில் நேற்று அவர்களுக்கும், குடிவரவு அமைச்சின் சட்டத்தரணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், அவர்கள் சட்டத்தரணிகளை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று அவுஸ்திரேலியாவின் மனித உரிமை கண்காணிப்பக சட்டத்தரணியான டேனியல் வெப்பினை குறித்த அகதிகள் சந்தித்துள்ளார்.

இராணுவ முகாமில் பாரிய நிதி மோசடி-

sri armyஅனுராதபுரம் இராணுவ முகாமில் இடம்பெற்ற 80 இலட்சம் ரூபாய் நிதி மோசடி தொடர்பாக இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதியின் கட்டளைப்படி, இராணுவ விசேட விசாரணைக்குழு இந்த நபர்களைக் கைதுசெய்துள்ளது. முகாமின் கணக்காளரும், அவருடைய உதவியாளரும் இணைந்தே மேற்படி நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகின்றது. நியமிக்கப்பட்ட கட்டணங்களுக்கு மேலதிகமாக செலுத்தப்பட்டதாக போலியான கணக்குகளை காண்பித்து, இந்த நிதிக் கொள்ளை இடம்பெற்றுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

கொழும்பின் பாதுகாப்புக் கடமையில் 3ஆயிரம் பொலீசார்-

police--628x220வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நகருக்கு வருகைதரும் மக்களின் பாதுகாப்பிற்காக மூவாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார் கொழும்பு மாநகரிலுள்ள சகல வெசாக் வலயங்களையும் உள்ளடக்கப்படும் வகையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ரோந்து சேவை, போக்குவரத்து வழிகாட்டல்கள், வீதி சோதனை போன்ற நடவடிக்கைகளிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என உயர் பொலீஸ் அதிகாரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

சலிம் மாசுப் பதில் பிரதம நீதியரசராக நியமனம்-

law helpஉயர் நீதிமன்ற சிரேஸ்ட நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி சலிம் மாசுப் பதில் பிரதம நீதியரசராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நேற்றையதினம் அலரிமாளிகையில் சந்தித்த சலிம் மாசுப் பதில் பிரதம நீதியரசருக்கான தனது நியமனக் கடிதத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் கண்காணிப்பு-

அரசாங்கத்தின் அனுசரணையில் இயங்கும் 78 தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் மீதான கண்காணிப்பை அதிகரிப்பதற்கான பொறிமுறையினை அரசாங்கம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இத்தகைய பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒரு பில்லியன் ரூபா வரையிலும் செலவு செய்கின்றது. இதனை விடவும் பெருமளவில் இலவசப் புத்தகங்களையும் வழங்குகின்றது. ஆயினும் இவர்களை கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இப் பாடசாலைகளில் ஒரு தவணைக் கட்டணமாக 30 ஆயிரம் ரூபாமுதல் 40 ஆயிரம் ரூபாவரை அறவிறப்படுகின்றன. இவ்வாறான பாடசாலைகளில் 1,25,000 மாணவர்கள் உள்ளனர். ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கின்றோம். இலவச புத்தகங்களையும் கொடுக்கிறோம். இருப்பினும் பெற்றோர் அளவுக்கதிகமான கட்டணத்தை செலுத்தவேண்டியுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.