கோழி புரியாணி சாப்பிட்டு விட்டு மாட்டிறைச்சி கடை மீது தாக்குதல் இன்றைய நிலைமை இதுதான்; ரணில்
 
ranil01சிக்கன் புரியாணி சாப்பிட்டு விட்டே மாட்டிறைச்சிக் கடை மீது தாக்குதல் நடத்தும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளதாக  எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.க. எம்.பி. ஜயலத் ஜயவர்த்தன மீதான அனுதாப பிரேரணையில் உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
மாட்டிறைச்சி விற்பனை செய்யக் கூடாதென ஒரு குழுவினர் மாட்டிறைச்சிக் கடை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பௌத்த மதத்தில் உயிர்களை வதைக்க வேண்டாமெனக் கூறப்பட்டுள்ளதே தவிர மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாதெனக் கூறப்படவில்லை. இறைச்சி சாப்பிடுவதும் சாப்பிடாததும் எம்மைப் பொறுத்த விடயம்.
ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு வழமையுள்ளது. அதனை யாரும் தடுக்க முடியாது. சிக்கன் புரியாணி சாப்பிட்டு விட்டே மாட்டிறைச்சி விற்கக் கூடாதெனக் கூறி மாட்டிறைச்சிக் கடை மீது தாக்குதல் நடத்தும் நிலையை இன்று காணக்கூடியதாகவுள்ளது.

பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்வதற்கான காரணம்chogm
  
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போது, கரிசனை காட்டப்பட வேண்டிய விடயங்களில் வெளிப்படையான முன்னேற்றத்தைக்காட்டுமாறு இலங்கையை மேலும் வலியுறுத்துவதற்கான சந்தர்ப்பம் தனக்கு கிட்டுமென பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற உயர்ஸ்தானிகரைக் கேட்டுப் பாருங்கள் எனும் நிகழ்ச்சித்தொடரின்போது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டைப் பகிஷ்கரிப்பதற்குப் பதிலாக அதில் கலந்துகொள்ளப்போவதாக பிரித்தானிய அரசாங்கம் எதற்காக தீர்மானித்திருந்ததென்ற கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு குறித்த விடயப்பரப்புக்களில் வெளிப்படையான முன்னேற்றத்தைக் காட்டுமாறு இலங்கை அரசை மேலும் வலியுறுத்திடவும் மேற்படி மாநாடு அரிய வாய்ப்பொன்றாக அமையவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய நகரான பேர்த்தில் நடைபெற்றிருந்த முந்தைய கூட்டத்தில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்துவதென எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் புதியதொன்றல்ல எனவும் அவர் கூறினார்.பொதுநலவாய அமைப்பில் பிரித்தானியா கொண்டுள்ள முக்கியத்துவம் காரணமாகவே மேற்படி மாநாட்டில் தான் கலந்துகொள்ளபோவதென்பதை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரன் இதற்கு முன்னர் உறுதிப்படுத்தியிருந்தார்இது குறித்து உயர்ஸ்தானிகர் ரான்கின் மேலும் தெரிவிக்கையில், பொதுநலவாய அமைப்பானது ஜனநாயகம், அபிவிருத்தி, மனித உரிமைகள், நீதி மற்றும் சட்டவாட்சி ஆகியவற்றுக்கான பகிர்ந்துகொள்ளப்பட்ட கண்ணியம் கலந்த விழுமியங்களைக் கொண்டுள்ளதொன்றாகுமெனவும், இத்தகைய விழுமியங்களை இலங்கை பேணி நடக்குமென்ற தனது எதிர்பார்ப்பை பிரித்தானிய அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நுவரெலியா,சீதா-எலிய பகுதியில் பஸ்ஸொன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.A300(35)

நுவரெலியா, சீதா-எலிய பகுதியில் பஸ்ஸொன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், குறித்த பஸ்ஸில் பயணித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் உட்பட நால்வர் பலியாகியுள்ளதுடன், 87 பேர் காயமடைந்துள்ளனர். பதுளையிலிருந்து நுவரெலியாவுக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு சுற்றுலா வந்த தனியார் பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது

தென்னாபிரிக்க பிரதி அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இவர் திங்கட்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்மைப்பினரை சந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்திற்கு மத்தியஸ்தம் வகிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்குமிடையிலான பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும், மத்தியஸ்தம் வகிக்கவும் தென்னாபிரிக்கா விருப்பம் தெரிவித்திருந்தது. அத்துடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட அரச தரப்பினரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் தென்னாபிரிக்க பிரதிநிதிகள் முன்னரும் சந்தித்துப் பேசியிருந்தனர்.

வடக்கு, கிழக்கில் 25ஆயிரம் வீடுகளை அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை-

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 25000 வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைப் பிரதிநிதி பெர்னாட் சாவேஜ் இந்த உறுதிமொழியை பிரதமர் டி.எம். ஜயரட்னவை சந்தித்தபோது வழங்கியுள்ளார். அடுத்த ஆண்டில் இந்த வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. இலங்கையின் அபிவிருத்திக்கு முழுமையான அளவில் உதவிகள் வழங்கப்படும் எனவும் பேர்னாட் சாவேஜ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் சமவுரிமையோடு வாழ நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்-

இலங்கையில் தமிழ்மக்கள் சுயமரியாதையுடனும், நீதி மற்றும் சமவுரிமை வழங்கப்பட்டவர்களாகவும் வாழ்வதற்கு இந்தியா வினைத்திறனான ராஜதந்திரி என்ற கதாப்பாத்திரத்தை வகிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிஸ பிரிவு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து வலியுறுத்திய கடிதம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் யெசூரியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தில், இந்திய – இலங்கை உடன்படிக்கையில் கீழான 13ம் திருத்தச் சட்டத்தின்கீழ், தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுகள் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அச்சுறுத்தலால் வெளிநாடுகளில் தலைமறைவான ஊடகவியலாளர்கள்-

கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் 2013 மே மாதத்திற்குமிடைப்பட்ட காலப்பகுதியில் 20க்கு மேற்பட்ட இலங்கை ஊடகவியலாளர்கள் தலைமறைவாகி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் மூவர் நாடு திரும்பியுள்ளதாகவும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதத்திற்கும் இந்த வருடம் மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நாடு திரும்பியுள்ள மூவர் உள்ளிட்ட 26 ஊடகவியலாளர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியிருந்தனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகைதுறைப் பணிசார்ந்த படுகொலைகள் குறைந்துள்ள போதிலும் உலகிலேயே கொலைக்குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுதல் குறித்த படுமோசமான பதிவுகளில் ஒன்றாக கடந்த தசாப்தத்திற்கு மேலாக விசாரணைக்கு எடுக்கப்படாத ஒன்பது ஊடகவியலாளர்களின் கொலைகள் விளங்குகின்றன என ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து ஜோன் ராங்கின் விளக்கம்- இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின்போது, கரிசனை காட்டப்பட வேண்டிய விடயங்களில் வெளிப்படையான முன்னேற்றத்தைக் காட்டுமாறு இலங்கையை மேலும் வலியுறுத்தும் சந்தர்ப்பம் தமக்கு கிட்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற உயர்ஸ்தானிகரைக் கேட்டுப்பாருங்கள் நிகழ்ச்சியின்போது பொதுநலவாய மாநாட்டைப் பகிஷ்கரிப்பதற்குப் பதிலாக அதில் பங்கேற்கப் போவதாக பிரித்தானியா எதற்காக தீர்மானித்தது என்ற கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கின் இதனைக் கூறியுள்ளார். மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்களில் வெளிப்படையான முன்னேற்றத்தைக் காட்டுமாறு இலங்கை அரசை மேலும் வலியுறுத்திடவும் மேற்படி மாநாடு அரிய வாய்ப்பொன்றாக அமையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள்மீதான வன்முறை அதிகரித்த நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம்-

பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறை அதிகரித்துள்ள ஏழு நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 37 வீதமான பெண்கள் தமது கணவரால் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மியன்மார், கிழக்கு திமோர், இந்தியா, பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இந்நிலைமை அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போது உலகளாவிய ரீதியில் தொற்றுநோயை போன்று பரவிவருவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் மைதான சம்பவம் குறித்து அறிக்கை கோரல்-

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இங்கிலாந்தின் கார்டிப் மைதானத்தில் இடம்பெற்ற வெற்றிக் கிண்ண அறையிறுதி போட்டியின்போது, புலிக் கொடியுடன் சிலர் மைதானத்தினுள் பிரவேசித்திருந்தனர். இது குறித்து இலங்கையரசு பிரித்தானியாவிடமிருந்து அறிக்கை கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் ஊடாக இவ் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இச் சம்பவத்தின்மூலம், இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கான பாதுகாப்பை உரிய வகையில் வழங்கவில்லை என உறுதியாகியிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகம குற்றம் சுமத்தியுள்ளார்.

நெடுந்தீவில் 40அடி மனிதனின் பாதச்சுவடு-

யாழ்., நெடுந்தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 40அடி மனிதனின் பாதச்சுவட்டைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் உ;ட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்துள்ளனர். இந்த பாதச்சுவடு உருவாகியமைக்கு விஞ்ஞான ரீதியிலும், வரலாற்று ரீதியிலும் பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுவதாக நெடுந்தீவு பிரதேச செயலர் ஆழ்வார்பிள்ளை சிறி தெரிவித்துள்ளார். பாறைகள் சிதைவடைந்து இந்த சுவடு உருவானதாகவும், 40அடி மனிதன் காலை வைத்ததால் உருவானதாகவும், இராமாயணப் போர் நடைபெற்றபோது அனுமான் மலையைத் தூக்கிக்கொண்டு வரும்போது அவர் வைத்த பாதச்சுவடு என்றும் பல்வேறு கதைகள் இது தொடர்பாக தெரிவிக்கப்படுவதாகவும் பிரதேச செயலர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்-

கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடற்பரப்பில் நிலவும் காலநிலை மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய நீண்டநாள் மீன்பிடி படகுகள் மற்றும் சிறு மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்கப்பட்டுள்ளது. இதேவேளை, மன்னாரிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பிலும், யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையான கடற்பரப்பிலும் இன்று கொந்தளிப்பு ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இக் கடற்பகுதிகளில் மீன்பிடி, கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

18 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு-

கொழும்பு பத்தரமுல்ல, மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகளில் தங்கியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வீடுகளில் தங்கியிருந்தபோது 2001ஆம் அண்டு முதல் வாடகை செலுத்தவில்லையென மேற்படி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நுகேகொடை மாவட்ட நீதிபதி நாமல் பலல்லவின, இவர்களை எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளார்.