Header image alt text

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்-

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்றுமாலை 5மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வராஜா, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சங்கையா, கிருஷ்ணபிள்ளை, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், துரைரெத்தினம், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், கருணாகரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், க.சிவநேசன் (பவன்), ராகவன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில் தேர்தல் நியமனக் குழுவும், நிதிக்குழுவும் பிரச்சாரக்குழுவும் நியமிக்கப்பட்டது;. பின்பு முதலமைச்சர் வேட்பாளர் சம்பந்தமாக நீண்டநேரம் ஆராயப்பட்டது. விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக வரவேண்டும் என்பதை இரா.சம்பந்தன் அவர்கள் மிகவும் ஆணித்தரமாக ஆதரித்து நின்றார். அதேவேளையில் மற்றைய கட்சிகளைச் சேர்ந்த பிரதநிதிகள் மாவை சேனாதிராஜா அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக வரNவுண்டும் என்பதை ஆதரி;த்து தங்களுடைய கருத்துக்களைக் மிகவும் ஆணித்தரமாக கூறினார்கள் இந்தப் பிரச்சினை இழுபறி நிலையை அடைந்ததால் ஒரு முடிவில்லாமல் கூட்டம் நாளைய தினம்வரை பிற்போடப்பட்டு;ளளது..

இலங்கையர்களை கரைக்கு அழைத்துவர நடவடிக்கை-

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்தபோது சர்வதேச கடற்பரப்பில் நிர்க்கதிக்குள்ளான நிலையில் காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் கடற்படையினரால் இன்றுமுற்பகல் காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இக் குழுவினரில் 46 ஆண்களும் 10 பெண்களும் 17 சிறார்களும் அடங்குவதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். காலிக்கு அழைத்துவரப்பட்ட இந்தக் குழுவினரை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கடற்படையினர் வழங்கிய தகவலுக்கு அமைய நேற்று முன்தினம் இக் குழுவினர் காப்பாற்றப்பட்டனர். காலியிலிருந்து 290 கடல்மைல் தொலைவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த நிலையிலேயே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

மனித உரிமை நிலைப்பாட்டை வெளிப்படுத்த எதிர்பார்ப்பு-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் இலங்கைக்கு விஜயம் செய்யும்போது, இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவுள்ளார். பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் பரோன்ஸ் செயிடா வர்சி இதனை நேற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு பிரித்தானியாவின் சார்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும், வெளிவிவகார செயலர் வில்லியம் ஹேக்கும் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்கள் இலங்கையின் அரசியல் தீர்வு, மனித உரிமைகள் மற்றும் பொதுநலவாய நாடுகளின் பெறுமதிகள் தொடர்பில் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவர் என கூறப்படுகிறது.

 பிராந்திய ஊடகவியலாளரின் வீட்டின்மீது தாக்குதல்-

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பிராந்திய ஊடகவியலாளரொவருரின் வீடு இனந்தெரியாதேரினால் நேற்றிரவு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டின் யன்னல் கதவுகள் சேதமடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலீசார் தெரிவித்துள்ளனர். அட்டாளைச்சேனை 16ஆம் பிரிவு, கிழக்கு வீதி, தைக்கா நகரைச் சேர்ந்த எப்.எம் முர்தளா என்ற பிராந்திய ஊடகவியலாளரின் வீடே தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. ஊடகமொன்றில் வெளியான செய்தியினை அடுத்தே இவரின் வீடு தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பெண்ணின் மண்டையோடு அணிகலன்கள் மீட்பு-

யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரின் மண்டையோடு மற்றும் அணிகலன்கள் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி வாதரவத்தை பகுதியிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் தெரிவித்துள்ளார். வாதரவத்தை பகுதியில் அமைந்துள்ள இராணுவ காவலரணிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திலுள்ள காட்டு பகுதியிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இளம் பெண்ணின் தோடுகள் மற்றும் தலைக்கு அணியும் கிளிப் வகைகள், செருப்புகள் மற்றும் ஆடைகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளார். அப்பகுதிக்கு ஆடு மேய்;க்க சென்ற ஒருவர் மண்டையோடு கிடப்பதை கண்டு அது தொடர்பில் நேற்றுமாலை அயலவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து  அச்சுவேலி பொலீஸ் நிலையத்திற்கு தகவல்கள் கொடுக்கப்பட்டன. இதனையடுத்தே மேற்படி மண்டையோடு உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்கு குழு-

கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கான ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பரிந்துரைத்துள்ளார். ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி தமது செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு பணிப்புரை விடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 Add_1

11.07.2013
Paper2வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் 2002 உயர்தர பழைய மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ‘விடியல் கல்வி அறக்கட்டளை’ அமைப்பு தனது கன்னிச் சேவையினை இன்று ஆரம்பித்துள்ளது. வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழிகாட்டி புத்தகங்களை இவ்வமைப்பு வழங்கியது. இன் நிகழ்வினை பாடசாலை பிரதி அதிபர் திருமதி. த. யுகராஜா ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து உரையாற்றிய பாடசாலை அதிபர் திரு. சு. வஸ்தியாம்பிள்ளை இவ் அமைப்பின் செயற்பாடுகள் தொடர வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பிரதி அதிபர், அதிபர், விடியல் அமைப்பின் தலைவர் கி. பிரணவன், உப தலைவர் சி.சிவதர்சன், பொருளாளர் அ.அனுசியன் செயற்குழு உறுப்பினரும் அப்பாடசாலை ஆசிரியருமான சே.நிமலன் ஆகியோர் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வைத்தனர். 
 

News

Posted by plotenewseditor on 11 July 2013
Posted in செய்திகள் 

எதிர்வரும் 25முதல் ஆகஸ்ட் முதலாம் திகதிவரை வேட்புமனு தாக்கல்-

srilanka flagவட மாகாண சபை, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான காலப்பகுதி எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை அமையும் என தேர்தல் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவித்துள்ளன. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியே மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் திகதியை தேர்தல் ஆணையாளர் அறிவிக்கவுள்ளார். பெரும்பாலும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் செப்டெம்பர் 21 அல்லது 28 ஆம் திகதிகளில் சனிக்கிழமை தினம் ஒன்றில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. வட மாகாண சபை உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதிகள் இன்று 11ஆம் திகதி தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் அறிவிக்கப்படவுள்ளது. வட மாகாண சபை மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கும் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிவரையான காலப்பகுதிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்.
 
வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தேர்தல் பணிகளுக்கு வர ஏற்பாடு-

வடக்கு, மத்திய, வடமேல் ஆகிய மாகாண சபை தேர்தல் நடவடிக்கையின் பொருட்டு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 10 பேர் இலங்கை வரவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தாய்லாந்து, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய ஆசிய வலய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களே இவ்வாறு இலங்கை வர தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பெப்ரல் அமைப்பு அரசியல் கட்சிகளிடம் எழுத்துமூலமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. உத்தேச மாகாண சபைத் தேர்தல்களின்போது முறைகேடுகள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்களுக்கு வேட்பு மனுத்தாக்கல்களை மேற்கொள்ள இடமளிக்க வேண்டாம் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 
 
யாழ். அக்கரை கிராமம் விடுவிப்பு-

jaffnaயாழ். மாவட்டத்தில் இராணுவம் நிலைகொண்டிருந்த வளலாய், அக்கரை கிராமம் இன்று பொதுமக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றுகாலை இந்த கிராமத்தை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. 1986ஆம் ஆண்டு இக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள் யுத்தம் காரணமாக பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வசித்து வருகின்றனர். இதுவரை காலமும் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த இந்த கிராமத்தில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு படையினர் இன்று உத்தியோகபூர்வமாக வழங்கியுள்ளனர். இதன் முதற்கட்டமாக இக்கிராமத்தில் வாழ்ந்த 38 குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அம்மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பிரதேச செயலாளர் ஊடாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
பொதுமக்களின் முறைப்பாடுகள் அதிகரிப்பு-

பொதுமக்கள் தற்சமயம் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை அதிகளவில் செய்வதாக லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் லக்ஸ்மன் ஜயவர்தன தெரிவித்துள்ளார். கடந்த காலப்பகுதியில் லஞ்ச மற்றும் ஊழல் தொடர்பான அதிகளவிலான முறைப்பாடுகள் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அதிகளவிலானவை துஸ்பிரயோகம் தொடர்பானவை என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
 
பெண்கள் முறைப்பாட்டு செயற்குழு-

எதிர்வரும் காலத்தில், பெண்கள் முறைப்பாட்டு செயற்குழு அமைக்கப்பட வேண்டும் என சபாநாயகர் ஷமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் மகளீர் ஒன்றியம் நேற்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் ஒன்று கூடியது. மகளீர் ஒன்றியத்தின் தலைவர் சுமேதா ஜி. யசேனாவின் தலைமையில் இந்த ஒன்றுகூடல் இடம்பெற்றது. இதில், சபாநாயகர் ஷமல் ராஜபக்ச, பிரதமர் டி.எம்.ஜயரட்ன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இங்கு உரையாற்றும்போதே சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.. இங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மகளீர் தொடர்பாக ஆராய்வதற்கான தேசிய மட்ட மகளீர் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தற்போது மதமானது பெண்களினாலேயே தக்க வைக்கப்பட்டுள்ளது என  பிரதமர் டி.எம். ஜயரட்ன தனதுரையில் தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்ற குழு இலங்கை விஜயம்-

indiaதமிழகத்தில் இருந்து 10 பேர் அடங்கிய இந்திய நாடாளுமன்றக் குழு ஒன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் இக்குழு இலங்கை வரும் என பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த குழுவினர் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டம் குறித்து ஆராயவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இந்த குழு இலங்கைக்கு வருகை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆஸி. செல்ல முயன்ற இலங்கையர்கள் தமிழகத்தில் கைது-

australienதமிழ் நாட்டிலிருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள், பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற முகவர் உட்பட இரண்டு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் ஊத்துக்காட்டில் சந்தேகப்படும் படியாக சிலர் கடந்த 2 நாட்களாக தங்கி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து வாலாஜாபாத் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதி முகாம்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் இவர்கள் என்பது விசாரணையின் போது தெரியவந்துள்ளது. விசாரணையின் போது இவர்கள் மதுரை ஆணையூர் அகதிகள் முகாம் சுப்ரமணிய அகதிமுகாம் மற்றும் கும்மியடிப்புண்டி அகதி முகாம்களைச் சேர்ந்தோர் என தெரியவந்துள்ளது.. இவர்கள் விசாரணைகளின் பின்னர் தத்தம் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.