17.07.2013.
வவுனியாவில் 24ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்-
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றுமாலை 4மணியளவில் ஆரம்பமாகி மாலை 6.30மணிவரையில் நடைபெற்றது. வீரமக்கள் தினமானது கடந்த 13ம்திகதி முதல் நேற்று 16ம் திகதி வரையான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம்திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது. Read more