வடக்கில் கூட்டமைப்பை ஐ.ம.சு.மு. தோற்கடித்தால் மட்டுமே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் : திஸ்ஸ விதா­ரண

Tissaஎதிர்­வரும் வட மாகாண சபைத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி தோற்­க­டித்தால் மட்­டுமே நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வைக் கண்டு நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்த முடியும் என்று முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­யான லங்கா சம சமாஜ கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கில் இளை­ஞர்கள் மத்­தியில் இன­வா­தத்தை தூண்டி அர­சியல் செய்­து­கொண்­டி­ருக்­கின்­றது. எந்­த­வொரு நல்ல விட­யத்­தையும் விமர்­சித்தே வரு­கின்­றது. இது சர்­வ­தே­ச­மட்­டத்தில் இயங்­கு­கின்ற இலங்­கைக்கு எதி­ரான சக்­தி­க­ளுக்கு சிறந்த ஆயு­த­மாக அமை­கின்­றது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

வடக்கு மக்­களின் இத­யங்­களை வெல்­வ­தற்கு வடக்குத் தேர்­தலை சுயா­தீ­ன­மா­கவும் நேர்­மை­யா­ன­தா­கவும் நடத்­த­வேண்டும். இதனை அர­சாங்கம் கவ­னத்­திற்­கொள்­வது அவ­சி­ய­மாகும் என்றும் அமைச்சர் கூறினார்.கொழும்பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

காணிப் பிரச்சினை எதிர்காலத்தில் பாரிய விளைவுக்கு வழிவகுக்கும் : சபையில் சம்பந்தன் எச்சரிக்கை

sambanthanaasfasfஅரசியல் தீர்வு, 13ஆவது திருத்தத்திற்கு மேலான அதிகாரப்பகிர்வு, வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐ.நா. வுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் உறுதி மொழிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தைப் புறக்கணிக்கவோ அல்லது தான்தோன்தோன்றித்தனமாக செயற்பட்டு இலங்கை – இந்திய உடன்படிக்கையை இரத்துச் செய்யவோ முயற்சிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா.சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கிலே நிலவியுள்ள காணிப்பிரச்சினையானது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளுக்கு வழி வகுக்கும் என்பதால் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் அங்கு நிலவும் நீதியற்றதும் நியாயமற்றதுமான நிலைமைக்கு தீர்வு காணுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அமர்வின் போது வடக்கு – கிழக்கில் எழுந்துள்ள காணி விவகாரம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரேரணையை சமர்ப்பித்த அவர் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக உரை நிகழ்த்தியதுடன் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் காணி சுவீகரிப்பு இராணுவ மற்றும் சிங்களக்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்களை புள்ளிவிபரங்களுடனும் முன்வைத்தார்.

சம்பந்தன் எம்.பி.யின் பிரேரணைக்கு அஸ்வர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை

untitledவடக்கில் உரு­வா­கி­யுள்ள காணிப் பிரச்­சி­னைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுத் தலைவர் இரா.சம்­பந்தன் கொண்டு வர­வி­ருந்த சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை தொடர்­பாக ஆளுந்­த­ரப்பு எம்.பி.ஏ.எச்.எம்.அஸ்வர் எழுப்­பிய ஒழுங்குப் பிரச்­சி­னையால் நேற்று வியா­ழக்­கி­ழமை சபை நட­வ­டிக்­கைகள் பிரதி சபா­நா­யகர் சந்­திம வீரக்­கொ­டி­யினால் 10 நிமி­டங்­க­ளுக்கு இடை நிறுத்­தப்­பட்­டன.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வடக்கில் உரு­வா­கி­யுள்ள காணிப் பிரச்­சி­னைகள் தொடர்­பாக சம்­பந்தன் எம்.பி. சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணை­யொன்றை விவா­தத்­திற்கு சமர்ப்­பிக்க முற்­பட்ட போது ஒழுங்குப் பிரச்­சினை கிளப்­பிய அஸ்வர் எம்.பி.இவ்­வி­டயம் தொடர்பில் உயர் நீதி­மன்­றத்தில் 177ஃ2013, 178ஃ2013, 179ஃ2013, 180ஃ2013, 236ஃ2013, 237ஃ2013, 238ஃ2013 ஆகிய இலக்­கங்­க­ளுக்­கி­டை­யி­லான அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களும் அதேபோல் 145ஃ2013, 135ஃ2013, 205ஃ2013 ஆகிய இலக்­கங்­க­ளி­லான மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருப்­ப­துடன் அவற்றில் அமைச்சர் ஒரு­வரும் பிர­தி­வா­தி­யாக இணைக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் இது நீதி­மன்ற விசா­ர­ணைக்கு உட்­பட அமைந்­தி­ருப்­ப­தற்கு அமைய விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்ள முடி­யா­தென்று சுட்டிக் காட்­டினார். அதன் பிர­காரம் இவ்­வி­டயம் தொடர்பில் சபைக்கு தலைமை தாங்கிக் கொண்­டி­ருக்கும் பிரதி சபா­நா­ய­கரிட­மி­ருந்து தீர்ப்­பொன்றை எதிர்­பார்ப்­ப­தா­கவும் அஸ்வர் எம்.பி. தெரி­வித்தார்.

எனினும் இவ்­வி­ட­ய­மா­னது சபா­நா­ய­கரின் முன்­னி­லையில் பல தட­வை­களும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் பேசப்­பட்டு இணக்கம் காணப்­பட்­ட­தற்­க­மைய விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் அஸ்வர் எம்.பி.யின் ஒழுங்குப் பிரச்­சினை தொடர்­பில்­லா­த­தொன்று என ஐ.தே.கட்­சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான ரவி கரு­ணா­நா­யக்க எம்.பி. சுட்டிக் காட்­டினார். இதே­வேளை ஜன­நா­யக தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுத் தலை­வ­ரான அநுர திஸா­நா­யக்க இதன் போது கருத்து வெளி­யி­டு­கையில், இவ்­வி­டயம் தொடர்­பாக கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் 3 தட­வை­க­ளுக்கும் அதி­மாக பேசப்­பட்­டுள்­ளது. அவற்றில் சபை முதல்வர், ஆளுந்­த­ரப்பு பிர­தம கொறடா இரு­வரும் கலந்து கொண்­டி­ருந்­தனர். வடக்கு மக்­களின் காணி பிரச்­சி­னைகள் பற்றி பேசு­வது தொடர்பில் ஆளுந்­த­ரப்பில் எவரும் அதன் போது ஆட்­சேபம் வெளி­யிட்­டி­ருக்­க­வில்லை.

எனவே வழக்­குகள் தொடர்­பு­பட்ட விட­யங்கள் அல்­லது ஏனைய காணி பிரச்­சி­னை­களை பற்றி நாம் இங்கு பேச முடியும். ஆகையால் இந்த பிரே­ர­ணையை விவா­திக்க இட­ம­ளிக்­கப்­பட வேண்டும் என்று கூறினார். இந்த நேரம் பிரே­ர­ணையை கொண்டு வரு­வ­தற்கு நாங்கள் இணக்கம் வெளி­யிட்­டி­ருந்த அதே­நேரம் உறுப்­பினர் ஒருவர் சபையின் பிரே­ரணை தொடர்பில் பிரச்­சினை கிளப்­பு­வ­தற்­கான உரி­மையை மறுக்க முடி­யாது. வழங்கும் தீர்ப்வை தாங்கள் ஏற்­றுக்­கொள்ள தயா­ராக உள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

நேற்று முன்­தினம் தான் பிரே­ர­ணையின் பிர­திகள் அர­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் கிடைத்­ததன் பின்னர் தான், அதன் உள்­ள­டக்கம் தெரி­ய­வரும் என்றும் ஆளுந்­த­ரப்பின் பிர­தம கொற­ட­வான அமைச்சர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார். எனினும் இவ்­வி­டயம் பற்றி கட்சித் தலைவர் கூட்­டத்தைக் கூட்டி சுட்­டிக்­காட்டி ஆராயும் பொருட்டு சபை நட­வ­டிக்­கை­களை 10 நிமி­டங்­க­ளுக்கு இடை நிறுத்­து­வ­தாக சபைக்கு தலைமை தாங்­கிக்­கொண்­டி­ருந்த பிரதி சபா­நா­யகர் சந்­திம வீரக்­கொடி பிற்­பகல் 2.15 க்கு சபைக்கு அறி­வித்தார்.