வவுனியாவில் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர்கள் பங்கேற்ற நிகழ்வும், கலந்துரையாடலும்-

10

வவுனியா திருநாவற்குளம் ஐயனார் முன்பள்ளி பாடசாலையின் 2013ம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டி 11.08.2013 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந் நிகழ்விற்கு திருமதி.ஜி.மரியா ரோஸ் அவர்கள் தலைமை தாங்கியதுடன் பிரதம விருந்தினர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களான ஜி.ரி லிங்கநாதன் (விசு), க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இவ்விழா நிறைவடைந்த பின்னர் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர்கள் ஜி.ரி லிங்கநாதன் (விசு), க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் அப்பகுதி மக்களையும், ஆதரவாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.