சாவகச்சேரியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு-

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகமொன்று இன்றுமுற்பகல் 10மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. சாவகச்சேரி நகரசபைத் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி, சரவணபவன், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் நல்லையா குமரகுருபரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சட்டத்தரணி சயந்தன், தம்பிராஜா, அனந்தி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்