மன்னாரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்-

Mar2 mar3 mar4 Mnr

DSC09611  DSC09642

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் மன்னார் பொது விளையாட்டரங்கில் இன்றுமாலை இடம்பெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்பதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும்இ பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடினார்கள். மன்னார் ஆயருடனான இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜாஇ தர்மலிங்கம் சித்தார்த்தன்இ சுரேஷ் பிரேமச்சந்திரன்இ செல்வம் அடைக்கலநாதன்இ எம்.ஏ சுமந்திரன்இ யோகேஸ்வரன்இ அரியநேந்திரன் மற்றும் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து மன்னார் பொது விளையாட்டரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தலைமையில் பொதுக்கூட்டம் ஆரம்பமானதுஇ இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட எட்டு வேட்பாளர்களும் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். இதனையடுத்து கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜாஇ தர்மலிங்கம் சித்தார்;த்தன்இ சுரேஷ் பிரேமச்சந்திரன்இ செல்வம் அடைக்கலநாதன் எம்.ஏ.சுமந்திரன்இ சீ.யோகேஸ்வரன்இ பி.அரியநேந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தாஇ வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.