Header image alt text

இணுவில், கொக்குவில் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்-

யாழ். இணுவில் பகுதியில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கொன்று இடம்பெற்றுள்ளது. இணுவில் இளந்தாரி கோயிலடியில் இந்த தேர்தல் கருத்தரங்கு இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன், வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் உதயகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். Read more

இலங்கையில் எதேச்சாதிகாரப் போக்கு அதிகரிப்பு-நவநீதம்பிள்ளை-

இலங்கையில் எதேச்சாதிகாரப் போக்கு அதிகரித்து வருவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எச்சரித்துள்ளார். இலங்கையில் உண்மையைக் கண்டறியும் பயணத்தை மேற்கொண்ட நவநீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் நேற்றுக்காலை செய்தியாளர்களிடம் பேசியபோதே இவ்வாறு கூறியுள்ளார். Read more

வடமாகாண தேர்தல் கண்காணிப்பு-

தேர்தல்கள் திணைக்களத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று வட மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் தேர்தலில், வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே அவர்களின் இந்த விஜயம் அமைந்துள்ளது.இந்நிலையில், ஏற்கனவே தெற்காசிய தேர்தல்கள் அதிகாரிகள் ஒன்றியம், தேர்தலை கண்காணிப்பதற்கான குழுவொன்றை அனுப்ப தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுதவிர, இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, நேப்பாளம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வட மாகாணத்தின் நிலைமைகளை உடனுக்குடன் அறியும் நோக்கில், தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வாரந்தர அறிக்கையினை கோர தீர்மானித்துள்ளார். இந்த பணிப்புரைக்கு அமைய தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் வடக்கு மாகாணத்திற்கு விஜயம்செய்து, அங்குள்ள நிலைமைகளையும், கிடைக்கபெறும் தேர்தல்கள தொடர்பான முறைப்பாடுகள் குறித்தும் வாரந்தரம் அறிக்கையினை சமர்ப்பிப்பரென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா சபைக்குள் புலிகள் இல்லை-நவநீதம்பிள்ளை-

இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை பக்கச் சார்பாக செயற்படவில்லை. அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபைக்குள் புலிகளும் இல்லை. இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாடுகள் மற்றும் பொறுப்புடமைகளின் பிரகாரமே ஐக்கிய நாடுகள் சபையும் ஐ.நா. மனித உரிமை பேரவையும் செயற்படுகின்றது என மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐ.நா. அலுவலகத்தில் நேற்றுஇடம்பெற்ற செய்தியாளார் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஐ.நா. இலங்கை விவகாரங்களில் பக்கச்சார்பாக செயற்படுவதாகவோ தனிப்பட்ட ரீதியில் தீர்மானங்களை நிறைவேற்றுவதாகவோ கூறுகின்றமை அடிப்படையற்ற தன்மையாகும். ஏனெனில் 60 நாடுகளுக்கு மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் விஜயத்தை மேற்கொண்டு பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்துள்ளேன். அதேபோன்று மனித உரிமைகள் தொடர்பிலான பூகோள மீளாய்வு கூட்டத்தொடரில் உலகத்தின் அனைத்து நாடுகளினதும் மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து ஆரயப்பட்டு அறிக்கை வெளியிடப்படுகிறது. இலங்கை தொடர்பில் மாத்திரம் பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல. புலிகளின் போர்க்குற்றங்கள் குறித்தும் விசாரணை அவசியம் என்பதை நாம் வலியுறுத்தியுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

பனிச்சங்கேணி பாலம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு-

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாகரை புதிய பனிச்சங்கேணிப் பாலத்தை திறந்து வைத்துள்ளார். மட்டக்களப்பு-திருக்கொண்டியாமடு – திருகோணமலை வீதியில் மஹிந்த சிந்தனையின் துரிதகதி வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடை உதவியின் கீழ் 1060 மில்லியன் ரூபாய் செலவில் இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ, பௌத்தமதப் பெரியார்களும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்க சிப்லி பாரூக் மற்றும் ஜப்பான் நாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

காரைதீவில் மனித எச்சங்கள் மீட்பு-

அம்பாறையின் காரைதீவு, 8ஆம் பிரிவில் கடற்கரையையண்டிய வளவொன்றிலிருந்து இன்றுகாலை குப்பையைப் புதைப்பதற்கு குழி வெட்டியபோது மனித எச்சங்கள் வெளிப்பட்டுள்ளன. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிபேரலையின் பின்னர்; கரையொதுங்கிய பெரும்பாலான சடலங்கள் பரவலாக இப்பகுதிகளில் புதைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது சுனாமியின்போது பலியான உடலாயிருக்கலாமென கருதப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.