Posted by plotenewseditor on 1 September 2013
Posted in செய்திகள்
வடமாகாண தேர்தல் கண்காணிப்பு-
தேர்தல்கள் திணைக்களத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று வட மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் தேர்தலில், வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே அவர்களின் இந்த விஜயம் அமைந்துள்ளது.இந்நிலையில், ஏற்கனவே தெற்காசிய தேர்தல்கள் அதிகாரிகள் ஒன்றியம், தேர்தலை கண்காணிப்பதற்கான குழுவொன்றை அனுப்ப தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுதவிர, இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, நேப்பாளம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வட மாகாணத்தின் நிலைமைகளை உடனுக்குடன் அறியும் நோக்கில், தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வாரந்தர அறிக்கையினை கோர தீர்மானித்துள்ளார். இந்த பணிப்புரைக்கு அமைய தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் வடக்கு மாகாணத்திற்கு விஜயம்செய்து, அங்குள்ள நிலைமைகளையும், கிடைக்கபெறும் தேர்தல்கள தொடர்பான முறைப்பாடுகள் குறித்தும் வாரந்தரம் அறிக்கையினை சமர்ப்பிப்பரென அறிவிக்கப்பட்டுள்ளது.