Header image alt text

வவுனியா ஆச்சிபுரம், தரணிக்குளம், பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள்-

TNA candidates Visu Mohan (1)தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள் வவுனியா ஆச்சிபுரம் மற்றும் தரணிக்குளம் பகுதிகளில் நேற்று இடம்பெற்றுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோருடன், ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும், நண்பர்களும் மேற்படி கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். Read more

அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 28வது நினைவுதினம் அனுஷ்டிப்பு-

DSC_0495இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2013) அனுஷ்டிக்கப்பட்டது. 28வது நினைவுதின நிகழ்வுகள் யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் திரு.கௌரிகாந்தன் அவர்களின் தலைமையில் இன்றுகாலை நடைபெற்றது. இதன்போது மலராஞ்சலியும் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வலி.தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான சிவகுமார், கணேசவேல், வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பரமேஸ்வரலிங்கம், முக்கியஸ்தர் இலகுநாதன் (புண்ணியம்), சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவர் குமாரவேல் ஆகியோரும், ஊர்ப் பிரமுகர்களும் உரையாற்றினர். இந்த நிகழ்வில் அமரர் தர்மலிங்கம் அவர்களின் ஆதரவாளர்களும், நண்பர்களும், பெருமளவிலான பொதுமக்களும், கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு வைத்தியர் தியாகராஜா அவர்களின் தலைமையில் மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌன அஞ்சலி இடம்பெற்றது. இந்நிகழ்வில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன், அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அன்னாரது நினைவாக இன்று நண்பகல் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது.2013-09-02 07.42.092013-09-02 07.32.412013-09-02 08.18.582013-09-02 08.52.43

 

 

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதைத் தடுப்பதற்காக வேட்பாளர்களும், வாக்காளர்களும் அச்சுறுத்தப்படுகின்றனர்-தர்மலிங்கம் சித்தார்த்தன்

120_content_p16_h1நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறத் தவறினால், நீண்ட காலமாக நாம் மேற்கொண்டு வருகின்ற போராட்டங்களினுடைய, அல்லது தமிழ் தேசியத்தினுடைய வலு நிச்சயமாக குறைவடையும். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு எழுந்துள்ளது. இதனை உணர்ந்துகொண்டு அவர்கள் அதனைச் செய்வார்கள் என நம்புகின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். Read more

வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்-பிரித்தானியா-

இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வு மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் பல உள்ளதாக பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்துக்களிலிருந்து இவ்விடயம் புலனாவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியபோது நவனீதம்பிள்ளை சில கருத்துக்களை வெளியிட்டியிருந்தார். இவ்விடயங்கள் குறித்து பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அலிஸ்டயர் பர்ட் கூறியுள்ளார். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்தும், சட்டம் ஒழுங்கு, தனிமனித சுதந்திரம், ஊடக சுதந்திரம், மாற்றுச் சிந்தனையாளர் ஒடுக்குமுறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியிருந்தார். இந்த அனைத்து விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட இலக்குகள் இதுவரையில் இலங்கையில் எட்டப்பட்டிருக்கவில்லை என்பது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்தின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

நவில் பிள்ளையின் கருத்துக்கள் தொடர்பில் கரிசனை கொள்ளுமாறு வலியுறுத்தல்-

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பி;;ல் வெளியிட்டுள்ள கருத்துக்களை ஐக்கிய நாடுகள் சபையும் பொதுநலவாய நாடுகளும் கரிசனையில் கொள்ளவேண்டும் என அனைத்துலக மன்னிப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்துலக மன்னிப்பு சபையின் ஆசிய பிராந்திய உதவி பணிப்பாளர் பொலி ட்ரஸ்கோட் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கை சென்றிருந்த நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமைகள் குறித்து விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் குறித்த கருத்துக்களை ஐ.நா சபையும் பொதுநலவாய நாடுகள் அமைப்பும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ட்ரஸ்கோட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.