நவில் பிள்ளையின் கருத்துக்கள் தொடர்பில் கரிசனை கொள்ளுமாறு வலியுறுத்தல்-

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பி;;ல் வெளியிட்டுள்ள கருத்துக்களை ஐக்கிய நாடுகள் சபையும் பொதுநலவாய நாடுகளும் கரிசனையில் கொள்ளவேண்டும் என அனைத்துலக மன்னிப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்துலக மன்னிப்பு சபையின் ஆசிய பிராந்திய உதவி பணிப்பாளர் பொலி ட்ரஸ்கோட் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கை சென்றிருந்த நவநீதம்பிள்ளை இலங்கையின் மனித உரிமைகள் குறித்து விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் குறித்த கருத்துக்களை ஐ.நா சபையும் பொதுநலவாய நாடுகள் அமைப்பும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ட்ரஸ்கோட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.