நாவாந்துறை, அராலி பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம்-
யாழ். நாவாந்துறைப் பகுதியில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. திரு. ஜேக்கப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா மற்றும் யாழ் மாவட்ட வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பிரதேச சபை தலைவர்கள், அங்கத்தவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.