Header image alt text

நாவாந்துறை, அராலி பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம்-

2013-09-12 18.46.47Navanthurai (1)யாழ். நாவாந்துறைப் பகுதியில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. திரு. ஜேக்கப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா மற்றும் யாழ் மாவட்ட வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பிரதேச சபை தலைவர்கள், அங்கத்தவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

வலி தெற்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-

2013-09-11 17.40.56 2013-09-11 17.43.06 2013-09-11 17.47.43 2013-09-11 18.08.45 2013-09-11 18.11.14யாழ்ப்பாணம் வலி தெற்கு உடுவில், மள்ளுவம் பகுதியிலும், கோண்டாவில் பகுதியின் தாவடி கிழக்கிலும் நேற்றையதினம் மாலை தமிழ் தேசியக் கூடடமைப்பின் இரு தேர்தல் கருத்தரங்குகள் இடம்பெற்றுள்ளன. இக்கருத்தரங்குகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் பிரகாஸ் மற்றும் ஊர்ப் பிரமுகர்களும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர். இக் கருத்தரங்குகளில் பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவிலான இளைஞர்களும், முதியோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இங்கு உரையாற்றிய அனைவரும், வட மாகாணசபைத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும்பான்மை வெற்றி பெறுவதனை உறுதிசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

மல்லாவியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் (10.09.2013) முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி சிவன்கோவில் வளாகத்தில் இடம்பெற்றது. மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் திரு. தனிநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் முள்ளியவளையின் மூத்த அரசியல் பிரமுகர் முத்து சுப்பிரமணியம் அவர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். இங்கு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட புளொட் வேட்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள், Read more

வவுனியா நெடுங்கேணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்-

IMG_7286 nedunkerny TNA meeting Sept 11 -2013 (1) nedunkerny TNA meeting Sept 11 -2013 (2) nedunkerny TNA meeting Sept 11 -2013 (3)தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று வவுனியா நேடுங்கேணியில் இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர்களும் இக்கூட்டத்தில் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் உள்ளுராட்சிசபை தலைவர்கள், உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊர்ப் பிரமுகர்கள் ஆதரவாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர். வேட்பாளர் அறிமுகமும் இதன்போது இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு) அவர்களின் இல்லத்தில், கூட்டமைப்பின் வேட்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு) அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோருக்குமிடையிலான தேர்தல் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.