வவுனியா காத்தார் சின்னக்குளத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு-

IMG_0119 IMG_0085  IMG_0099  IMG_0112தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கருத்தரங்கு நேற்றுமாலை 4.00 மணியளவில் வவுனியா காத்தார் சின்னக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது. வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளருமான ஜி.ரி லிங்கநாதன் (விசு) அவர்களும், ஊர்ப் பிரமுகர்களும் இக்கருத்தரங்கில் உரையாற்றினார்கள். இக் கருத்தரங்கில் வேட்பாளர் ஜி.ரி லிங்கநாதன் (விசு) அவர்களின் நண்பர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களுமென பலர் கலந்து கொண்டிருந்தனர். இங்கு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் ஜி.ரி லிங்கநாதன் (விசு) அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெற வேண்டுமென்றும், இதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதுடன், வட மாகாணசபை நிர்வாகம், அதற்குள்ள அதிகாரங்கள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார்.