வடமாகாண சபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரனின் பதவிப் பிரமாணம் தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் இது குறித்து அடுத்த ஓரிரு தினங்களுக்கிடையில் தீர்மானிக்கப்படும தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்
வடமாகாண சபையின் முதலமைச்சராக திரு .விக்னேஸ்வரன் அவர்களை   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாக தெரிவு செய்து கட்சிச் செயலாளர் திரு. மாவை சேனாதிராஜா ஊடாக மாகாண ஆளுநருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அவர்கள் நாடு திரும்பியவுடன், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆளுநர் தெரியப்படுத்தியதும். பதவிப் பிரமாணம் செய்வதற்கான அழைப்பு திரு.விக்னேஸ்வரனுக்கு அனுப்பப்படும்.
இதேவேளையில், பதவிப் பிரமாண ஏற்பாடுகள் தொடர்பில் வடமாகாண ஆளுநர், முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. விக்னேஸ்வரனை அடுத்த வாரத்தில் சந்தித்துப் பேசுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
இதேவேளையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாருக்கு முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.