Header image alt text

வட மாகாண முதலமைச்சருக்கு நியமனக் கடிதம்-

வடமாகாண முதலமைச்சர் நிலைக்கு தாம் நியமிக்கப்பட்டதற்கான கடிதத்தை முன்னாள் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் நேற்று முற்பகல் வடமாகாண ஆளுநரிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார். வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி தமது அலுவலகத்தில் வைத்து இந்த நியமனக் கடிதத்தை விக்கினேஸ்வரன் அவர்களிடம் கையளித்துள்ளார்.

பாலித கோஹன தெரிவு

ஐ.நா பொதுச்சபையின் 6வது குழுவான சட்டக்குழுவின் தலைவராக இலங்கையின் ஐ.நாவிற்கான வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுச்சபையின் 68வது அமர்வின்போதே அவர் இந்த பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவர், ஆசியா மற்றும் பசுபிக் குழுவினரால் இந்த நிலைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் பாலித கோஹன பொதுச்சபையின் 6வது குழுவுக்கு தெரிவுசெய்யப்பட்ட முதலாவது இலஙகையர் என்பது குறிப்பிடத்தக்கது.

நவிபிள்ளையின் காலக்கெடு முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு-

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக கடந்த 25ம் நாள், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்த வாய்மூல அறிக்கை மற்றும் கருத்துக்கு அமெரிக்கா பூரண ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது அமர்வு கடந்தவாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த அமர்வு குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பணியகத்தினால் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிரியா, சூடான், கொங்கோ, மத்திய ஆபிரிக்க குடியரசு, சோமாலியா, இலங்கை ஆகிய நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா வெளிப்படுத்திய கரிசனை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், இலங்கை தொடர்பான, அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து விபரிக்கப்பட்டுள்ளதாவது:- ‘ Read more

வடமாகாண சபைக்கான அமைச்சுப் பதவிகள் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்பாத நிலையில் அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

இதுதொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தபோது இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள வெகுமதி ஆசனங்கள் தொடர்பிலும் அமைச்சுப் பதவி மற்றும் பதவியேற்பு போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
போனஸ் ஆசனம் தொடர்பில் அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டதற்கிணங்க முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சுப் பதவிகள் தொடர்பிலும், மற்றும் பதவியேற்பு தொடர்பிலும் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. அவை இரண்டிற்;கும் நாட்கள் இருக்கின்ற படியால் மீண்டும் ஒரு தடவை கூடி இறுதி முடிவை எடுப்போம்’ என்று அவர் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களிற்கான கூட்டம் யாழ்.உதயன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. இதில் வடமாகாண சபைக்குரிய நான்கு அமைச்சுப் பதவிகள் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றன. இக்கலந்துரையாடலில், அமைச்சுப் பதவிகள் தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுப்பதில் கட்சிகளுக்கிடையில் இழுபறி நிலைக் காணப்பட்டதால் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்குவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சிக்கு 2 அமைச்சுப் பதவிகளும் ஈ.பி.ஆர்.எல்எப்.க்கு 1 அமைச்சும் ரெலோவிற்கு 1 அமைச்சும் என்ற அடிப்படையில் இந்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதில் முக்கிய அமைச்சான கல்வி மற்றும் சுகாதார அமைச்சு தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்படவேண்டும் என்று தமிழரசுக்கட்சி கோரி வருவதால் ஏனைய கட்சிகள் இதற்கு எதிர்ப்பு காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனிமேல் தேர்தல்கள் நடக்கும்போது தனது கட்டளையை செயற்படுத்தவல்ல தனி பொலிஸ் அணியை தான் கொண்டிருப்பேன் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்கால தேர்தல்களில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் அரச சொத்துகளை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு தனியான பொறிமுறையை ஏற்படுத்த போவதாகவும் மஹிந்த தேசப்பிரிய உறுதியளித்துள்ளார். சில அரச நிறுவன அதிகாரிகள் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி தமக்கு விருப்பமான வேட்பாளர்களின் பயன்பாட்டுக்காக வழங்கியதாகவும் இக் கூட்டத்தில் பேசப்பட்டது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் இனிவரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு ஆணையாளர் கூறியுள்ளார்.