Header image alt text

மூத்த ஊடகவியலாளர் செல்லையா நடராஜா அவர்களின் மறைவிற்கு புளொட் அனுதாபச் செய்தி-

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் செல்லையா நடராஜா அவர்களின் மறைவானது பத்திரிகைத் துறைக்கு மிகப்பாரிய இழப்பாகும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1950களில் ஊடகத்துறையில் காலடி எடுத்துவைத்த அமரர் நடராஜா அவர்கள், வீரகேசரி பத்திரிகையில் தம்மை இணைத்துக்கொண்டார். பின்னர் அதன் உதவி ஆசிரியராகவும், அதன் பிறகு செய்தி ஆசிரியராகவும் ஊடகத் துறையில் கடந்த 2005ஆம் ஆண்டுவரையில் பணியாற்றி ஓய்வுபெற்றார். 1983ஆம் ஆண்டில் காணப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் அமரர் நடராஜா அவர்கள் துணிச்சலுடன் தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்தவர். அத்துடன் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும், தேவைகளையும் உலகிற்குச் சொல்வதில் அயராது பாடுபட்டவர். போராட்ட வழிமுறை மாறியபோது அதற்கான நியாயங்களை கோடிகாட்ட அவர் பின்னின்றதில்லை. Read more

உள்ளக சுயநிர்ணயம் ஒரு நாட்டை பிளவுபடுத்தாது-சிவி விக்னேஸ்வரன்-

உள்ளக சுயநிர்ணயம் ஒருநாட்டை பிரிவுபடுத்தாமல் ஒற்றுமைப்பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்ற உண்மையை எமது சிங்கள சகோதர, சகோதரிகள் தமது அரசியல்வாதிகளுக்கு இடித்துரைக்க முன்வரவேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்ற பின் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்றுகாலை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டேன். Read more

வட மாகாண முதலமைச்சராக சி.வி விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம்-

வட மாகாண முதலமைச்சராக திரு. சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் முன்னிலையில் அலரிமாளிகையில் வைத்து இன்றுமுற்பகல் 9.30மணியளவில் தமிழில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். முதலில் திரு சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் வட மாகாணசபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி. விக்னேஸ்வரன், விக்னேஸ்வரன் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், அரச தரப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடன், பிரதமர் டீ.எம்.ஜயரத்ன, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, அஸ்வர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், பிரபா கணேசன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். இது பற்றி கருத்துத் தெரிவித்த புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தாம் நல்லெண்ண நோக்கிலும், ஒற்றுமைக்காகவுமே இந்நிகழ்வில் பங்கேற்றதாகவும், ஆனாலும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்வது பிழையானது என்ற தனது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.