மூத்த ஊடகவியலாளர் செல்லையா நடராஜா அவர்களின் மறைவிற்கு புளொட் அனுதாபச் செய்தி-
வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் செல்லையா நடராஜா அவர்களின் மறைவானது பத்திரிகைத் துறைக்கு மிகப்பாரிய இழப்பாகும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1950களில் ஊடகத்துறையில் காலடி எடுத்துவைத்த அமரர் நடராஜா அவர்கள், வீரகேசரி பத்திரிகையில் தம்மை இணைத்துக்கொண்டார். பின்னர் அதன் உதவி ஆசிரியராகவும், அதன் பிறகு செய்தி ஆசிரியராகவும் ஊடகத் துறையில் கடந்த 2005ஆம் ஆண்டுவரையில் பணியாற்றி ஓய்வுபெற்றார். 1983ஆம் ஆண்டில் காணப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் அமரர் நடராஜா அவர்கள் துணிச்சலுடன் தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்தவர். அத்துடன் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும், தேவைகளையும் உலகிற்குச் சொல்வதில் அயராது பாடுபட்டவர். போராட்ட வழிமுறை மாறியபோது அதற்கான நியாயங்களை கோடிகாட்ட அவர் பின்னின்றதில்லை. Read more