Header image alt text

வடமாகாண சபை அமைச்சர்களின் விபரம் வெளியீடு-

வடமாகாண சபைக்கான அமைச்சரவை தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் – தம்பிராஜா குருகுலராஜா சுகாதார அமைச்சர் – பத்மநாதன் சத்தியலிங்கம் விவசாய அமைச்சர் – பொன்னுத்துரை ஐங்கரநேசன் உள்ளுராட்சி அமைச்சர் – பாலசுப்பிரமணியம் டேனிஸ்வரன் அவைத் தலைவர் – கந்தையா சிவஞானம், பிரதி அவைத் தலைவர் – அன்ரனி ஜெகநாதன் ஆகியோரின் பெயர்களே வெளியிடப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற இக் கூட்டத்தில் வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் மாத்திரமே கலந்துகொண்டிந்தமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக கமலேந்திரன் தெரிவு-

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கந்தசாமி கமலேந்திரன் வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுச் செயலாளரினால் ஆளுநருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஈ.பி.டி.பி மேலும் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவில் இலங்கையர் கைது-

இலங்கையர் உள்ளிட்ட ஆறுபேர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். விஸா காலம் நிறைவடைந்த நிலையில், பிரித்தானியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லங்கேசியர் பகுதியில் வைத்தே இந்த இலங்கையர், குடிவரவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகரம் அறிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்ளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையரின் கைது தொடர்பில் இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் வடமாகாண சபையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையின் வடமாகாண சபையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட வேண்டும் என்று அங்குள்ள உள்ள பெண்கள் அமைப்புக்கள், விவசாய, மீன்பிடிதுறை சார்ந்த அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு நடவடிக்கையின் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
முல்லைத்தீவு அரச செயலகத்தின் முன்னால் கோரிக்கைகள் அடங்கிய சுலோக அட்டைகளைத் தாங்கிய வண்ணம் வீதியோரத்தில் கூடி நின்று தமது கவன ஈர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
சுனாமி பேரலைகளினாலும், யுத்தத்தினாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டம் அமைச்சுப் பொறுப்புக்கள வழங்கப்படாமல் புறகக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர்கள், தமது மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள நான்கு மாகாண சபை உறுப்பினர்களில் ஒருவருக்கு ஓர் அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்காக தமது கோரிக்கைள் அடங்கிய மகஜரை முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களாகிய டாக்டர் சிவமோகன் மற்றும் எம்.ரவிகரன் ஆகியோரிடம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கையளித்துள்ளனர்.
நான்கு பேர் அடங்கிய மாகாண சபை அமைச்சரவையை அமைப்பதற்காகப் பல தடவைகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் கூடி பேச்சுக்கள் நடத்தியுள்ள போதிலும், இன்னும் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாகாணசபை அமைச்சர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் விபரங்களை முதலலைச்சர் சி.வி.விக்னேஸ்வன் வெளியிடுவார் என்று எதிர்பாபர்க்கப்படுகின்றது

கனடாவின் பிரதமரான ஸ்டீபன் ஹார்ப்பர் அவர்கள் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்துகொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளர்

இலங்கையில் மூன்று வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குவந்த இலங்கைப் போர் மற்றும் அதன் பின்னரான காலப்பகுதி ஆகியவற்றில் அங்கு நிலவரங்கள் மேலும் மோசமடைந்துள்ளதாகவும் மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று காரணம் காட்டியே கனடாவின் பிரதமரான ஸ்டீபன் ஹார்ப்பர் அவர்கள் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்துகொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளர். கடந்த 2 வருடங்களில் இந்த விடயங்களில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதுடன் அந்த நிலைமைகளில் கணிசமான பின்னடைவு மற்றும் அவை மேலும் மோசமடைதல் ஆகியவற்றை நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. இதன் அடிப்படையில் இந்த காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லைஎன்று கனடிய பிரதமர் கூறியுள்ளார். அதுமாத்திரமன்றி காமன்வெல்த் அமைப்புக்கான நிதியுதவியையும் கனடா நிறுத்துவது குறித்து பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளார். காமன்வெல்த் அமைப்புக்கு நிதி உதவி வழங்குவதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கனடா வருடாந்தம் 20 மில்லியன் டாலர்களை அந்த அமைப்புக்கு வழங்கிவருகிறது. இதேவேளை கனடாவின் மூத்த செனட் உறுப்பினரும் காமன்வெல்த்துக்கான கனடிய பிரதமரின் தூதுவருமான ஹியூ சேகல் அவர்கள் காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலரான கமலேஸ் சர்மா இலங்கையின் கைப்பாவையாகச் செயற்படுவதாக விமர்சித்துள்ளார். இலங்கை பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவின் விவகாரத்தை உதாரணமாகக் காண்பித்துப் பேசிய அவர் அவை குறித்த தகவல்கள் அமைப்பின் தலைவர்களுக்கு செல்வதை செயலர் மறைத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையே கனடா இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்று எடுத்த முடிவு குறித்து கருத்து வெளியிட்ட காமன்வெல்த் அமைப்பின் பேச்சாளரான ரிச்சர்ட் உக்கு அவர்கள் தமது உறுப்பினர்களின் முடிவை தாம் மதிப்பதாகக் கூறியுள்ளார் ஆனால் காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலர் இலங்கையின் கைப்பாவை என்று கூறியதை அவர் நிராகரித்துள்ளார்.

 

இலங்கை கண்டனம்

Posted by plotenewseditor on 10 October 2013
Posted in செய்திகள் 

 கனடாவின் பிரதமரான ஸ்டீபன் ஹார்ப்பர் அவர்கள் இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்துகொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளர் இலங்கை கண்டனம்

மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்ற கனடாவின் முடிவை இலங்கை கடுமையாக கண்டித்துள்ளது. இந்த மாநாட்டுக்கு ஏனைய அனைத்து நாடுகளும் ஏகோபித்து ஆதரவு தரும் நிலையில் கனடா அதனை புறக்கணிப்பதன் மூலம் அது தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்கிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் கூறியுள்ளார். கனடா இலங்கை மாநாட்டை முற்றாக பகிஸ்கரிப்பதாகக் கூறவில்லை. வெளியுறவு அமைச்சு மற்றும் ஏனைய நிலைகளில் உள்ள பிரதிநிதித்துவம் ஒன்று கனடாவின் சார்பில் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளத்தான் போகிறது.