வட மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்-

வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றுகாலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் முன்னிலையில் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். இதில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகியவற்றின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களுள் 9பேர் பங்கேற்கவில்லை. டெலோ தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தார். ஈ.பி.எல்.ஆர்.எப்.பின் 5 மாகாணசபை உறுப்பினர்களும், புளொட்டின் 2 மாகாணசபை உறுப்பினர்களும், டெலோவில் இரு மாகாணசபை உறுப்பினர்களும் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இதன்படி வடமாகாண சபையின் உறுப்பினர்களாகத் தெரிவான ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் ஆறுமுகம் கந்தையா சர்வேஸ்வரன், சிவப்பிரகாசம் சிவமோகன், எம்.தியாகராஜா, மயில்வாகனம் இந்திரராஜா, ஆறுமுகம் சின்னத்துரை துரைராஜா ரவிகரன், புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமோதரம்பிள்ளை லிங்கநாதன், ரெலோ சார்பில் கனகலிங்கம் சிவாஜிலிங்கம், மன்னார் உறுப்பினர் குணசீலன் ஆகியோரே இந்நிகழ்வில் பங்கேற்றிருக்கவில்லை