மீசாலை, கந்தசுவாமி ஆலய கட்டிட நிதிக்கான வைபவம்-

20131020_162704 20131020_162903 DSC_0508 DSC_0509 DSC_0512 DSC_0515 DSC_0516

யாழ்ப்பாணம் மீசாலை கிழக்கு காட்டுவளவு கந்தசுவாமி கோயிலின் கட்டிட நிதிக்காக இன்று அதிஸ்டலாப சீட்டு குலுக்கப்பட்டு 9 வெற்றியாளர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. காட்டுவளவு கந்தசுவாமி ஆலய பரிபாலன சபைத் தலைவர் வதனதீசன் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது. மேற்படி கோயிலின் கட்டிட நிதிக்கான அதிஸ்டலாப சீட்டிழுப்பு நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்த சீட்டிலுப்பின் முதலாவது பரிசுக்கான வெற்றியாளரையும் தேர்ந்தெடுத்தார். இங்கு உரையாற்றிய காட்டுவளவு கந்தசுவாமி கோயில் பரிபாலனசபை தலைவர் வே.வதனதீசன் அவர்கள், இந்தக் கோயிலின் கட்டிட வேலைகள் பூர்த்தி செய்யப்படாதுள்ளன. இந்த வேலைகளை செய்து முடிப்பதற்கு பெருந்தொகையான நிதி தேவைப்படுகின்றது. எனவே இதற்கு அனைவரின் உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்கின்றோம். மக்கள் இயன்ற உதவிகளை செய்வதற்கு முன்வந்தால் இக்கோயிலின் கட்டிட வேலைகளை விரைவில் நிறைவுசெய்ய முடியுமென்று எதிர்பார்க்கின்றேன் என்றார்.