வழக்கம்பறையில் மௌனப் பிரார்த்தனை-

யாழ். வலி. மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் வலக்கம்பறை அம்மன் ஆலயத்தில் மௌனப் பிரார்த்தனை ஒன்று நேற்றுபகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை நடைபெற்றது. வலி. மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரனின் தலைமையில் ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த மௌனப் பிரார்த்தனை இடம்பெற்றது. இதன்போது மீளக் குடியமர்ந்தவர்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுதல், எமது பண்பாட்டு அம்சமான ஆலயங்களை அழிப்பதை நிறுத்துதல், பரவலாக இடம்பெற்றுவரும் பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், காணாமல் போனோர் தொடர்பில் விரைவாக திருப்தி அளிக்கக்கூடிய தீர்வை அளித்தல், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாது கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் யுவதிகளை விடுவிக்க விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற 6 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிடம் வலி.மேற்கு பிரதேசசபை தவிசாளரினால் கையளிக்கப்பட்டது.. இதன்போது குருமார்கள், வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன், பிரதேசசபை உறுப்பினர்கள், தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர்.