Header image alt text

வலி-வடக்கு மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இரண்டாம் நாளும் தொடர்கிறது போராட்டம்.

20131112_092732சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியமர்த்த கோரி வலி.வடக்கு மக்களால் நேற்றைய தினம் மாவட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பான ஆரம்பமாகிய உணவு விடுப்புப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று காலை 8மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இப் போராட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.
கடந்த 23 வருடங்களாக  6832 ஏக்கர் நிலப்பகுதி உயர்பாதுகாப்பு வலையம் ஆக்கப்பட்டுள்ளது.,
இன்று இரண்டாம் நாள் இந்த போராட்டத்தில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நாளாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், மாவைசேனாதிராசா சிறிதரன் ,வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களான குருகுலராசா, சத்தியசீலன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்  கஜதீபன், சித்தார்த்தன், சுகிர்தன்  ஆகியோரும் பிரதேச சபைகளின்  தவிசாளர், உப தவிசாளர் , உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண

வடக்கு நோக்கி பயணம் மேற்கொண்ட சனல்4 ஊடகவியலாளர்கள் அனுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

2398_content_yarldeviபொதுநலவாய மாநாட்டு செய்தி சேகரிப்பதற்காக இலங்கை வந்துள்ள கெலும் மக்ரே உட்பட சனல்4 ஊடகவியலாளர்கள் இன்று புதன்கிழமை வடக்கிற்கு விஜயத்தை மேற்கொண்டு பயணித்தனர்;. அவர்களை வடக்கிற்கு செல்லவிடாது ஆர்ப்பாட்டகாரர்கள் அனுராதபுரத்தில் அவர்கள் பயணம் செய்த ரயிலை மறித்து  எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கிளிநொச்சி நோக்கி யாழ். தேவி ரயிலில் பயணம் செய்த லண்டன் சனல் 4 குழுவினருக்கு எதிராக அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து, பதற்ற நிலை ஏற்பட்டது.  இறுதியாக சனல் 4 குழுவினர் கொழும்பு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.