வலி-வடக்கு மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இரண்டாம் நாளும் தொடர்கிறது போராட்டம்.

20131112_092732சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியமர்த்த கோரி வலி.வடக்கு மக்களால் நேற்றைய தினம் மாவட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பான ஆரம்பமாகிய உணவு விடுப்புப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று காலை 8மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இப் போராட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.
கடந்த 23 வருடங்களாக  6832 ஏக்கர் நிலப்பகுதி உயர்பாதுகாப்பு வலையம் ஆக்கப்பட்டுள்ளது.,
இன்று இரண்டாம் நாள் இந்த போராட்டத்தில் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நாளாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், மாவைசேனாதிராசா சிறிதரன் ,வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களான குருகுலராசா, சத்தியசீலன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்  கஜதீபன், சித்தார்த்தன், சுகிர்தன்  ஆகியோரும் பிரதேச சபைகளின்  தவிசாளர், உப தவிசாளர் , உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண