Header image alt text

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்குள் புகுந்த பொதுபல சேனா

srikotha001ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்குள் புகுந்த பொதுபல சேனா அமைப்பினர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் இதனால் ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் பொதுபலசேனாவினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதுடன் கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

பிரிட்டன் பிரதமர் கெமருன் , இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.

imagesCAZ5I27Gபிரிட்டன் பிரதமர் கெமருன் , பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். மோடியை சந்திப்பீர்களா என்று கேட்டதற்கு ஏன் கூடாது அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்திக்க தயார், ஏற்கனவே குஜராத் முதல்வருடன் சந்திப்புக்கான ஏற்பாடுகளை நாங்கள் நடத்த ஆரம்பித்திருக்கின்றோம் இன்னும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டிற்கு விஜயம் செய்யவுள்ள பிரித்தானிய பிரதமர் இந்தியாவிற்கு சென்றுள்ளார். இவர் பிரதமர் இல்லத்திற்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங்குடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டின் இந்தியா தொடர்பான நிலைப்பாடு மற்றும் நிலமைகள் தொடர்பாகவும் கலந்துரைடப்பட்டது.
இருநாடுகள் இடையிலான விசா நடைமுறைகள் , வர்த்தகம், பொருளாதாரம், மற்றும் இரு நாட்டு நல்லுறவு விடயங்கள் குறித்து இதன்போது பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
மேலுமம் சச்சின் ஒரு வியக்கத்தக்க அளவிட முடியாத சக்தி படைத்தவர் எனவும் கெமரூன் வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வலி-வடக்கு மக்களின் மீளக்குடியமர்த்த கோரி போராட்டம் மூன்றாம் நாளாக தொடர்கிறது.

DSCF4160 DSCF4178 DSCF4180தம்மை மீளக்குடியமர்த்தக் கோரி வலி-வடக்கு மக்கள்  ஆரம்பித்துள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் ஆரம்பமாகியுள்ளது.
இராணுவத்தினரால் உயர்பாதுகாப்பு வலையம் என்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை விடுவிக்க கோரி மக்கள்  மாவட்டபுரம் கந்தசுவாமி  ஆலய முன்றலில் போராட்டத்தினை மூன்றாவது நாளாகவும் முன்னெடுத்துள்ளார்கள். இன்றைய மூன்றாம் நாள்  போராட்டத்திலும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தாண்டி நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்றைய நாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் , வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன் , சித்தார்த்தன் , ஆகியோரும் , பிரதேச சபை தவிசாளர்கள்  உறுப்பினர்கள்  , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , கஜேந்திரன்  மற்றும் பொதுமக்கள்  எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் நேற்று புதன் அதிகாலை இடிக்கப்பட்டது.

131113084737_mullivaikkalmullivaikalmullivaykkal-memorial-parksஇலங்கையில் அரசு – புலிகளுடனான மோதல்களின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக இந்தியாவின் தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா அரசு நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி சுற்றுச் சுவர் நேற்று புதன் அதிகாலை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு அமைய மாநில வருவாய்த் துறை அதிகாரிகள் பெரும் இயந்திரங்களை கொண்டு சுவர்களை ததகர்த்தனர். Read more