பிரிட்டன் பிரதமர் கெமருன் , இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.

imagesCAZ5I27Gபிரிட்டன் பிரதமர் கெமருன் , பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். மோடியை சந்திப்பீர்களா என்று கேட்டதற்கு ஏன் கூடாது அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்திக்க தயார், ஏற்கனவே குஜராத் முதல்வருடன் சந்திப்புக்கான ஏற்பாடுகளை நாங்கள் நடத்த ஆரம்பித்திருக்கின்றோம் இன்னும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டிற்கு விஜயம் செய்யவுள்ள பிரித்தானிய பிரதமர் இந்தியாவிற்கு சென்றுள்ளார். இவர் பிரதமர் இல்லத்திற்கு சென்று பிரதமர் மன்மோகன் சிங்குடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டின் இந்தியா தொடர்பான நிலைப்பாடு மற்றும் நிலமைகள் தொடர்பாகவும் கலந்துரைடப்பட்டது.
இருநாடுகள் இடையிலான விசா நடைமுறைகள் , வர்த்தகம், பொருளாதாரம், மற்றும் இரு நாட்டு நல்லுறவு விடயங்கள் குறித்து இதன்போது பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
மேலுமம் சச்சின் ஒரு வியக்கத்தக்க அளவிட முடியாத சக்தி படைத்தவர் எனவும் கெமரூன் வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது