ஆரியகுளம் ஞானவைரவர் ஆலய விக்கிரகம் திருட்டு-

யாழ்ப்பாணம், ஆரியகுளம் ஞானவைரவர் ஆலயத்திலிருந்த 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பொன் பிள்ளையார் விக்கிரகம் நேற்று இரவு திருடப்பட்டுள்ளது. மேற்படி ஆலயத்தின் பூசகர் இன்றுகாலை பூஜை செய்வதற்காக ஆலயத்திற்கு சென்றிருந்த வேளையில் ஆலயத்தின் பிள்ளையார் விக்கிரகம் வைக்கப்பட்டிருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த விக்கிரகம் திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார். தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதினையடுத்து யாழ். குற்றத்தடுப்புப் பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.