ஊடகவியலாளர்களான அமரர்கள் நடா, ரவிவர்மா ஆகியோரின் நினைவுக் கூட்டம்-

வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் நடா என்கிற செல்லையா நடராஜா, மற்றும் ரவிவர்மா என்கின்ற தினக்குரல் ஊடகவியலாளர் பரமகுட்டி மகேந்திரராஜா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெறவுள்ளது. நாளைமாலை 5.30மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் இந்த நினைவு அஞ்சலிக் கூட்டம் நடைபெறுவுள்ளது. ஊடகத்துறையினர் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. ஒன்றியத்தின் தலைவர் அனந்த் பாலகிட்டனர் தலைமையில் இடம்பெறும் இக்கூட்டத்தில் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வி.தனபாலசிங்கம் அமரர் நடராஜாவுடன் பணியாற்றிய அனுபவங்கள் தொடர்பாக பிரதான உரையாற்றவுள்ளார். இதனையடுத்து ஊடகத்துறை நண்பர்கள் ரவிவர்மனின் ஊடகப் பணிகள் தொடர்பாக உரையாற்றவுள்ளனர். நிகழ்வில் பங்கு கொள்ளுமாறு ஊடகத்துறையினர் உட்டப அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்.