இனவாதம் பேசி வெற்றி பெற்றதை மறந்துவிட்டு அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் செய்வதே சிறந்தது வடமாகாண முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரனுக்கு அமைச்சர்-டக்ளஸ் தேவானந்தா அறிவுரை.

imagesCAEM4UUCதேசிய இனப்பிரச்சினைக்கு மாகாணசபை முறைமையே மிகவும் சிறந்த தீர்வுத் திட்டம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் மிகச் சிறந்த அரசியல் பொறி முறையாக மாகாணசபை முறைமையை கருதுகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாத அரசியலை நடத்தியிருந்ததாகவும், அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு அபிவிருத்தித் திட்டங்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாத கொள்கைகள் கோட்பாடுகளை பின்பற்றியே மாகாணசபைத் தேர்தலில் வெற்றி யீட்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தோல்வி குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான சுதந்திரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிழையாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.சிங்கள அரசியல் கட்சிக்கு எதிராக தமிழ் அரசியல் கட்சி அடைந்த வெற்றியாக தேர்தல் வெற்றி சித்தரிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.