நல்லிணக்கம் குறித்து நடவடிக்கை இன்றேல் பொறுமை இழக்கும் நிலையேற்படும்-

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள், பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிடின் சர்வதேச சமுதாயம் பொறுமை இழந்துவிடக்கூடுமென அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவும் அமெரிக்க நட்பு நாடுகளும் இதனை வலியுறுத்திவருவதாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் நிருபர்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளார். இவ்வாறான முன்னேற்றம் இலங்கையில் ஏற்படுவதற்காக இலங்கையிலுள்ள எமது நண்பர்களுடன் நாம் மனப்பூர்வமாக வேலை செய்கின்றோம் என்றும் நிஷா பிஸ்வால் சுட்டிக்காட்டியுள்ளார்.