நெடுந்தீவு கொலை- வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட மூவர் கைது-

EPDPசுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ். நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை விவகாரம் தொடர்பில் அவரது மனைவி இன்றுகாலை ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவிலுள்ள அவரது வீட்டில் வைத்தே இவர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரனும் நெடுந்தீவைச் சேர்ந்த மற்றொருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.