மட்டக்களப்பில் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்-

pattathari niyamanam (2)pattathari niyamanam (1)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களாகக் கடமையாற்றி வந்த 1179 பட்டதாரிகளுக்கு நேற்றுக்காலை மட்டக்களப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட முகாமைத்துவத்திற்கான கருத்திட்டத்தில் பட்டதாரிப் பயிலுனர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள டேபா மண்டபத்தல் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். பட்டதாரிப் பயிலுனர்களாக கடந்த வருடம் 6ஆம் மாதத்தில் இணைக்கப்பட்ட 2000இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளில் முதல் தொகுதியினருக்கே இந்த நிரந்ததர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மிகுதியாக உள்ளவர்களுக்கான நியமனங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன.