பெண்களுக்கெதிரான வன்முறையை கட்டுப்படுத்தக்கோரி கவனயீர்ப்பு பேரணி
வடக்கு கிழக்கில் பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தக்கோரி பெண்கள் அமைப்பினால் இன்று யாழ்ப்பாணத்தில் பாரிய கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்-நீதிமன்றத்திற்கு அருகில் ஏ 9 வீதியில் இரண்டு மருங்கிலும் பெருமளவில் இன்று கலை ஒன்று கூடிய மக்கள் எதிர்ப்பு பதாகைகளையும் தாங்கியவாறு ஆரம்பித்த ஊர்வலம் மணிக்கூட்டு வீதி வழியாக ஆஸ்பத்திரி வீதியை சென்றடைந்து அவ் வீதியில் உள்ள யாழ்ப்பாண கல்லூரியின் உயர் கல்வி நிலையத்தை சென்றடைந்தது நின்றனர். யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கட்டுபடுத்த கோரியே இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது. Read more