வடமாகாண வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

npc2_CIபாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர்களாகக் கடமையாற்றிய முன்னாள் தொண்டர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் ஒரேயடியாக 4,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 10,000 ரூபாவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 462 பேர் பயனடைவர். வடக்கைச் சேர்ந்த கலைஞர்கள் 50 பேருக்கு அடுத்த ஜனவரி மாதம் முதல் மாதாந்தம் 5,000 ரூபா ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பள்ளி ஆசிரியர்களுக்குக் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்த 3,000 ரூபா கொடுப்பனவு நவம்பர் மாதத்திலிருந்து மீண்டும் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் 1,800 பேர் பயனடைவர். வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதம் நேற்று நடந்தது. கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஒதுக்கீடுகள் விவாதிக்கப்பட்டன. Read more