வடக்கு ஆளுநரை அகற்றும் பிரேரணையை நாடாளுமன்றில் கொண்டுவருவோம்: த.தே.கூ .
வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிரிக்கும் வட மாகாணசபைக்கும் இடையிலான அரசியலமைப்பு மோதல் நேற்று புதிய திருப்பத்தை கண்டது. வட மாகாண ஆளுநரை அகற்றவும் பூஜித ஜயசுந்தரவை வடக்குக்கு புதிய பொலிஸ் மாஅதிபராக நியமித்ததை எதிர்த்தும் நாடாளுமன்றில் ஒரு பிரேரணையை கொண்டுவரப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடித்துக் கூறியது.
வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். Read more