Header image alt text

எம்மை நாமே ஆழ்வதற்கான சந்தர்ப்பம் தரப்படவேண்டுமென வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்-

cv-wiஎமது மக்கள் நலன்சார்ந்து பலவற்றை நாம் அரசிடம் கேட்கின்றோம். ஆனால் நாம் கேட்பவற்றை வழங்கக் கூடாது என்ற மன நிலையில் பெரும்பானமை சமூகம் இருகின்றது. இந்த எண்ணம் மாற வேண்டும். எல்லாவற்றிற்கும் நாம் அரசை நம்பியிருக்கக் கூடாது. எமது தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ளவேண்டும். மத்திய அரசுக்கு அடுத்தபடியாக மாகாணசபையும் அதற்கு அடுத்த நிலையில் பிரதேச சபைகளும் உள்ளன. ஒவ்வொருவரும் அடுத்தவரது எல்லைக்குள் பிரவேசிக்காமல் இருந்தால் தான் சுமுகமான உறவினைக் கட்டியெழுப்பமுடியும். நாங்கள் பெரும்பான்மை இனத்தவரோடு, கட்சியால், மொழியால், கலைகளால் வேறுபட்டவர்கள். அதனால் தான் எமக்கு அதிகாரப்பகிர்வு தேவைப்படுகின்றது. எம்மை நாமே ஆழ்வதற்கான சந்தர்ப்பம் தரப்படவேண்டும். அரசு தமது கருத்தைப் பலப்படுத்தி எம்மை வலுவிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. அரசு எமக்கு நேசக்கரம் நீட்டுவது போல நீட்டி எம்மை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடுகிறது என அவர் யாழ் கரவெட்டி வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி சபைத் தலைவர் பொ.வியாகேசின் தலைமையில் இடம்பெற்ற வாரவிழாவும் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் 10 மில்லியனுக்கு ஏலத்தில்  இரும்புக்காக மொத்தமாக அள்ளிச் செல்லப்படுகிறது.

1a(546)முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொண்டு செல்லமுடியாமல் கைவிட்டு தப்பியோடிய மக்களினதும், இறந்த மக்களினதும் உரிமைகோரப்படாத, உரிமைகோரப்பட முடியாத நிலையிலிருந்த வாகனங்கள் அனைத்தும் இரும்புக்காக கொண்டு செல்லப்படுகின்றன. ஏற்கனவே தெற்கு வியாபாரிகளால் பகுதி பகுதியாக அபகரிக்கப்பட்டவை இப்போது மொத்தமாக அள்ளிச் செல்லப்படுகிறது.
இறுதியுத்தத்தின் போது கைவிடப்பட்டு எவராலும் உரிமை கோரப்படாது காணப்பட்ட பாவனைக்கு உட்படுத்தப்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட வாகனங்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால்பத்து மில்லியனுக்கு ஏலத்தில் விற்க்கப்பட்டுள்ளன. Read more

வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே உறுதியளித்துள்ளார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே உறுதியளித்துள்ளார் என இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி தெரிவித்தார்.

imagesCAV34F3Gஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தனக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அகாசி குறிப்பிட்டார். அத்துடன் சிறந்த நபரொருவர் வட மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த மாகாண மக்களிற்காக அரும்பாடுபடுவார் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். Read more