Header image alt text

கறுப்பின மக்களின் தந்தை நெல்சன் மண்டேலாவின் உடல் கண்ணீர் மழையுடன்  நல்லடக்கம்.

_71750545_020349087-1மறைந்த தென்னாபிரிக்க தந்தையும், முன்னாள் ஜனாதிபதியும், போராட்ட வீரரும் சமாதானத்தின் பரிசை பெற்றவருமான அமரர் நெல்சன் மண்டேலா உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் அவரது வீட்டின் அருகே அரச மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி சடங்கில் இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் உள்பட 100 நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் கண்ணீருடன் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர். Read more

Cabinet-meetingநெருக்கடிகளின் காரணமாக போயா தினத்தில் இலங்கை அரசின் அமைச்சரவை கூட்டம்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை காலை 7 மணியளவில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more

சிவிலியனையே ஆளுநராக நியமிக்க கோரப்படுகின்றதே தவிர சிங்களவரை நியமிக்க வேண்டாமென கூறவில்லை இதில் எந்தப் பிழையையும் நான் காணவில்லை: வாசுதேவ நாணயக்கார

vaasudevaநாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி மாகாண சபைகள் மற்றும் காணி, காணி அபிவிருத்தி அமைச்சுக்களின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஏகாதிபத்தியவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மஹிந்த ராஜபக்ஷ அடிபணியவில்லை. அனைத்தையும் அவர் தோல்வியடையச் செய்தார். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு தமது சேவைகளை மக்களுக்காக மேற்கொள்வதற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும். Read more

கூட்டமைப்பு-ஆளுநருக்கு இடையிலான பிரச்சினையை பேசி தீர்க்கவேண்டும்: விக்னேஷ்வரன் 

.
imagesதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தின் கீழிருக்கின்ற வடமாகாண சபையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிரிக்கும் இடையே உண்டாகியுள்ள மோதலை பேச்சுவார்த்தையினால் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று கலாநிதி கே.விக்னேஷ்வரன் கூறியுள்ளார். Read more