வடலியடைப்பு சைவப் பிரகாசா வித்தியாலய கட்டிடத் திறப்புவிழா-

iயாழ் வடலியடைப்பு சைவப் பிரகாசா வித்தியாலயத்தின் கட்டிடத் திறப்பு விழாவும் பரிசளிப்பு விழாவும் நேற்றையதினம் காலை 9மணியளவில்; ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது. பாடசாலையின் அதிபர் திரு. வ.அம்பலநாதர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டு பாடசாலைக் கட்டிடத்தினை திறந்து வைத்தார். பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் செ.சந்திரராஜா, சண்டிலிப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் த.சிவானந்தராஜா ஆகியோரும், கௌரவ விருந்தினராக சமுர்த்தி உத்தியோகத்தர் பாலமுரளி அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து பாடசாலைச் சிறார்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலைச் சிறார்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேற்படி கிராமத்துடன் தொடர்புடைய புலம்பெயர்ந்தவர்களும் பாடசாலையின் பழைய மாணவர்களும் இணைந்து இந்தக் கட்டிடத்தை நிர்மாணித்திருந்தனர்.

a b c d e f g hj