வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம்-

நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்பதுடன் இதனூடாக நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதனால் அக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றாது என கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்று வவுனியாவில் நடைபெற்ற இந்த கூட்டத்தின்போது, வடக்கு கிழக்கில் இடம்பெறும் பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. ஜனாதிபதியினால் விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பு தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் இதன்மூலம் நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாதென்று கூறப்பட்டு அதில் பங்கேற்பதில்லையென தீர்மானிக்கப்பட்டது.