ஆழிப்பேரலை அனர்த்தத்தின் ஒன்பதாம் ஆண்டு நினைவுதினம்-

eசுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்திகதி ஏற்பட்ட சுனாமிப்பேரலையால் இலங்கையில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. சுமாத்திரா தீவுகளின் ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 9.0ரிச்டர் அளவில் பதிவாகியதுடன், இப் பூமியதிர்ச்சி கடலில் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் அசுர அலைகளை உருவாக்கியது. knmljihfdxஇலங்கையில் முதலில் கல்முனையைத் தாக்கிய சுனாமிப் பேரலை குறுகிய நேரத்தினுள் திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உள்ளிட்ட 14 கரையோர மாவட்டங்களைத் தாக்கியது. இதனால் சுமார் 65ஆயிரம் வீடுகள் முற்றாக அழிந்ததுடன், 38ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமாகின. 23ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல்நிலங்கள் அழிவடைந்தன. காலி ஹிக்கடுவையில் கொடூரமான ரயில் விபத்தையும் ஆழிப்பேரலை ஏற்படுத்தியது. அங்கு ரயிலில் பயணித்த சுமார் 1500பேரில் 1000பேர்வரை பலியாகினர். அநேகமானவர்கள் காணாமற் போயிருந்தனர். இந்த ஆழிப்பேரலை தாக்கத்தினால் பல்லாயிரக்கணக்கானவர்கள் உறவுகளை இழந்து, வீடுகளை, சொத்துக்களை இழந்து நிர்க்கதிக்கு உள்ளாகினர். சுனாமிப் பேரலை காரணமாக உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக, நாடளாவிய ரீதியில் மத வழிபாட்டுத் தலங்கள், அலுவலகங்கள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இல்லங்களில் விசேட பிரார்த்தனைகளும், காலை 9.25முதல் 9.27வரையிலான இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலியும் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.