யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் இருவரும் பயங்கரவாதிகளே- பிரதியமைச்சர் ரியர் அட்மிரல் சரத் பி.வீரசேகர

Sarath1அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ரெப்பிடம் யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த தொழில் மற்றும் தொழிலாளர்கள் உறவுகள் பிரதியமைச்சர் ரியர் அட்மிரல் சரத் பி.வீரசேகர
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமெரிக்காவின் பிரிவினைவாத சதித்திட்டத்திற்கு துணை போகும் யாழ். மன்னார் ஆயர்கள் இரண்டு ஆயர்களும் அழிந்து போன பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் பயங்கரவாதிகளே ஆவார்கள். எனவே அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு விசாரணைகளை நடத்தும் தகுதி எமக்கு உள்ளது. எனவே சர்வதேச விசாரணைகள் அவசியமில்லையென்றும்.
பயங்கரவாதிகள் என்றால் நாட்டுக்கு எதிரானவர்கள் என்பதே அர்த்தமாகும். அதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாதது மட்டுமல்ல. பயங்கரவாதம் என்பதற்கு நடுவில் வேறு எவரும் அல்லது வேறு அர்த்தமும் வழங்க முடியாது.
எமது படையினர் மனிதாபிமான யுத்தத்தையே மேற்கொண்டனர். எமது கடற்படையினர் பலரை கொன்ற புலிகளின் கடற்படையின் தளபதி சூசையின் மனைவி பிள்ளைகளை இறுதி யுத்தத்தில் கடற்படையினர் கைது செய்தனர். இது யாருக்கும் தெரியாது. அவர்களுக்கு எதிராக எதனையும் செய்திருக்கலாம். ஆனால் எமது படையினர் அவர்களை பாதுகாத்தனர். இன்று அவர்கள் மகிழ்ச்சியாக உயிர் வாழ்கின்றனர்.
அதே போன்று தான் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பிரபாகரன் 250 மக்களை பணயக் கைதியாக வைத்துக்கொண்டு சுற்றிவர கண்ணிவெடிகளை புதைத்து இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினார். எமது படையினர் நினைத்திருந்தால் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம். ஆனால் அதைச் செய்யவில்லை. மாறாக கண்ணி வெடிகளுக்கு மேலாக நடந்து சென்று பிரபாகரனை பிடித்தனர் மக்களை பாதுகாத்தனர். இதனால் எமது படையினர் 300 பேர் கால்களை இழந்தனர்.
புலிகள் மக்களை, புத்திஜீவிகளை கொன்றனர். சிறுவர்களை படைக்கு சேர்த்தனர். அப்பொழுதெல்லாம் இந்த ஆயர்கள், சுமந்திரன், கூட்டமைப்பினர் எங்கே இருந்தனர். யுத்தம் முடிந்த பின்னர் புலிகள் புதைத்து வைத்த 5 இலட்சத்திற்கு மேலான கண்ணி வெடிகளை எமது படையினரே உயிரை பணயம் வைத்து அகற்றினர். மக்களுக்கு 3000 மேல் வீடுகளை நிர்மாணித்து கொடுத்தனர். அடிப்படை வசதிகளை ஏற்படுத்தினர். இதன் போது கூட்டமைப்பினரோ ஆயர்களோ ஏதாவது உதவிகளை செய்தார்களா? ஒன்றும் செய்யவில்லை.
அவ்வாறானவர்கள் இன்று அமெரிக்காவின் பிரிவினைவாதத்திற்கு துணை போகின்றனர். பயங்கரவாதத்தை உருவாக்க முயல்கின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக செயல்படவில்லை. மாறாக அதற்கு எதிரானவர்களாகவே செயல்படுகின்றனர் என்றார்.