கணேசபுரத்தில் வீடு முற்றாக எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி-

maanaadu (2)004qவவுனியா மரக்காரம்பளை வீதி, கணேசபுரத்தில் வசிக்கும் யதுகரன் லலிதா அவர்களின் வீடு நேற்றுக்காலை சாமி படத்துக்கு வைத்த விளக்கினால் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது. லலிதா தனது வீட்டின் சாமி படத்திற்கு விளக்கு வைத்துவிட்டு தனது 7வயது நிரம்பிய மகளான கலைவாணியை நெலுக்குளம் பாடசாலையில் சேர்ப்பதற்காக சென்றிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கலைவாணிக்கு 03வயதாகும்போதே தந்தை யதுகரன் 2007-11.03 அன்று தவசிகுளத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்க்கையைக் கொண்டுசென்ற லலிதாவின் குடும்பத்தை அவரது வீடு எரிந்தது மேலும் அவலநிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்நிலையில் இன்றுமாலை அங்கு சென்ற புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை முன்னாள் உப தலைவருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கத்தலைவரும் சமுக சேவையாளருமான சந்திரகுமார் (கண்ணன்), வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் ஜோச் வாசிங்டன், சமுக ஆர்வலர்கள் கேதீஸ், ஜெகதீஸ், ஆனந்தன் ஆகியோர் நிலைமைகளைப் பார்வையிட்டு, அதிரடி இணையத்தின் உதவியைக் கொண்டு லலிதாவின் குடும்பத்தின் அவசியத் தேவைகளுக்குரிய பொருட்களையும் நிதியுதவியையும் வழங்கியுள்ளனர்.