பிரித்தானிய தமிழ் மக்கள் ஒன்றிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்-

fdffdfwwwwCaptureதைப்பொங்கல் தினத்தன்று (14.01.2014) காலை பிரித்தானிய தமிழ் மக்கள் ஒன்றிய பிரதிநிதிகள் யாழ்ப்பாண நிலைமைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக வட்டுக்கோட்டை பகுதியில் வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளனர். இக் கலந்துரையாடலின்போது அண்மைக்காலத்தில் வடமாகாண சபை எதிர்நோக்கும் சவால்கள் பிரதேசசபைகள் எதிர்நோக்கும் சவால்கள் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்போது வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி.ஐ.நாகரஞ்சினி போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான உதவித்திட்டங்கள் போதுமானவையாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இக் கலந்துரையாடலின்போது வடமாகாண சபையை இயக்குவதில் திட்டமிட்டு உருவாக்கப்படும் தடைகள் பற்றியும் மிகத்தெளிவான விளக்கத்தை வடமாகாண சபை உறுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெளிவுபடுத்தினார். இந்த சந்திப்பில் வட்டுக்கோட்டை பகுதி கல்வியியலாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.