யாழ்.பொது நூலகத்திற்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான நூல்கள் அன்பளிப்பு

1(3750)அமெரிக்காவினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் த ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி யாழ்.பொது நூலகத்திற்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான 284 நூல்கள் கையளிக்கப்பட்டன.
இந் நூல்களை த ஏசியன் பவுன்டேசன் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஆர்.மகோர்ஸ் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் யாழ்.பொதுநூலக சிறுவர் பிரிவில் வைத்து இன்று கையளித்தார்.
இந்நிகழ்வில், யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, மாநகர ஆணையாளர் செ.பிரணவநாதன், த ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் டேவிட் ஆர்னோல்ட், த ஏசியன் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி டினேசா விக்கிரமநாயக்க, த ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தின் அமெரிக்க பிரதிநிதிகள், யாழ்.பொதுநூலக பிரதம நூலகர் மெல்டா கருணாகரன் மற்றும் பொதுநூலகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அபுதாபிக்கு விஜயம்

02(759)ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியை நேற்று மாலை சென்றடைந்துள்ளார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரும் சென்றுள்ளனர்.

இந்திய மீனவர்கள் 26 பேர் இன்று கைது

unnamed10யாழ். காங்கேசன்துறை கடற் பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் 26 பேர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை கடற் படையினர் தெரிவித்தனர். இந்திய புதுக்கோட்டை மாவட்டம் ஜனதாப்பட்டினம் பகுதியிலிருந்து ஆறு படகுகளில் வந்த 26 மீனவர்கள் காங்கேசன்துறை கடற் பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காங்கேசன்துறை கடற் படையினர் தெரிவித்தனர்

இலங்கையில் யுத்த காலத்தில் காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியம்

300(533)இலங்கையில் யுத்த காலத்தில் காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முன்னிலையில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் கடந்த சனிக்கிழமை முதல் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சாட்சியமளித்து வருகின்றனர்.  
இவ் ஆணைக்குழுவின் முன்னால், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் சாட்சியமளித்துள்ளார். Read more