எல்லையை மீறும் இந்திய மீனவர்களை கைது செய்வோம்- அமைச்சர் ராஜித சேனரட்ண

140113133823_fishermen_release_trincomalee_304x171_bbc_nocreditஇலங்கை கடற்பரப்பிற்குள் யார் அத்துமீறி மீன்பிடித்தாலும் அவர்களைக் கைது செய்வோம். இந்திய இலங்கை மீனவ பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தை திகதி அறிவிக்கப்பட்ட பின்னரும் இந்திய மீனவர்கள் சுமார் 500 பேர்வரை இலங்கை கடற்பகுதிக்கு வந்ததாகக் கூறும் இலங்கை மீன் பிடி அமைச்சர் ராஜித சேனரட்ண அவர்கள்,  (21-01-14) 25 பேரையும் முதல் நாள்; தாங்கள் 5 பேரையும்  கைது செய்ததாகவும். அதனைத் தாம் நிறுத்தப்போவதில்லை என்றும். இலங்கை கடற்பரப்பிற்குள் வரும் இந்திய மீனவர்களை தொடர்ந்தும் தாம் கைது செய்வோம் பேச்சு வார்த்தைகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.  

இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளியாரின் தலையீடு தேவையில்லை- பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ

140123144112_gotabaya_rajapaksa_batticaloa_512x288_bbcமட்டகளப்புக்கான ஒரு நாள் பயணமாக நேற்று வியாழனன்று சென்ற கோட்டாபய, இந்த பகுதியின் சமூக, சமய மற்றும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் உட்பட பலர் மத்தியில் தற்போதைய நிலவரம் தொடர்பாக உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியுமே தவிர வெளியார் தலையிட்டு தீர்த்து வைப்பார்கள் என்பது நடக்க முடியாத காரியம், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட அமெரிக்க அதிகாரிகளை கடுமையாக சாடி கருத்துக்களை வெளியிட்டார். Read more