வலி தெற்கு பிரதேச சபையில் கணனிமயப்படுத்தப்பட்ட ஆதன வரி செலுத்தும் நிகழ்வு-

vali south 23.01.2014 (21)vali south 23.01.2014 (20)யாழ். வலி தெற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி வார இறுதிநாள் நிகழ்வாக வலி தெற்கு பிரதேச சபையின் கணனி மயப்படுத்தப்பட்ட ஆதன வரி செலுத்தும் நிகழ்வு நேற்று முன்தினம் (23.01.2014) இடம்பெற்றது. வலி தெற்கு பிரதேச சபையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கணனிமயப்படுத்தப்பட்ட முதலாவது ஆதன வரியினை செலுத்தி இப்பணியை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் அனந்தி சசிதரன், பா.கஜதீபன், சுகிர்தன் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை யாழ். சிறுபிட்டி கிழக்கு கலைமகள் சனசமூக நிலையத்தின் முப்பதாவது ஆண்டுவிழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன், ஊர்ப் பிரமுகர்கள், பெண்கள், இளைஞர்கள் என பெருமளவிலானோரும் பங்கேற்றிருந்தனர். 

vali south 23.01.2014 (1)vali south 23.01.2014 (3)vali south 23.01.2014 (4)vali south 23.01.2014 (5)vali south 23.01.2014 (7)vali south 23.01.2014 (8)vali south 23.01.2014 (9)vali south 23.01.2014 (10)vali south 23.01.2014 (11)vali south 23.01.2014 (12)vali south 23.01.2014 (13)vali south 23.01.2014 (14)vali south 23.01.2014 (15)vali south 23.01.2014 (16)vali south 23.01.2014 (17)vali south 23.01.2014 (18)vali south 23.01.2014 (19)