மெனிக்பாம் முன்பள்ளிக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு-

manickfarm  (2) manickfarm  (3) manickfarm  (5) manickfarm  (11) manickfarm  (12)யாழ். வடலியடைப்பு, பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட 17.12.2013 அன்று இறைபதமடைந்த கிருஷ்ணர் கமலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தையொட்டி கனடாவிலுள்ள அன்னாரின் உறவுகளின் 35,000 நிதியுதவியின் கீழ், கோவில்குளம் சிவன்கோவில் முதியோர் இல்ல முதியோர்க்கான சிறப்பு உணவும், அத்தியாவசிய பொருட்களும் கடந்த வெள்ளிக்கிழமை (17.01.2014) வழங்கி வைக்கப்பட்டன. இதன்; தொடர்ச்சியாக. வவுனியா மெனிக்பாம் முன்பள்ளிச் சிறார்களின் நலன்கருதி மேற்படி முன்பள்ளிக்கான தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றுகாலை இடம்பெற்றது. புளொட் முக்கியஸ்தரும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பின்கீழ் இந்நிகழ்வு மெனிக்பாம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் சமூக சேவையாளர் தயா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்நிகழ்வில் கவிஞர் மாணிக்கம் ஜெகன், கிராம அபிவிருதிச் சங்க தலைவர் ந.நடராசா, முன்பள்ளி ஆசிரியர் ச.ஜெசி, கோவில்குளம் இளைஞர் கழக செயலாளர் ஜெனார்த்தனன், கோவில்குளம் இளைஞர் கழக இணைப்பாளர் காண்டீபன், சமூக ஆர்வலரும், கோவில்குளம் இளைஞர் கழக உறுப்பினருமான சதீஸ், பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரன் ஆகியோரும் பெருமளவு பொதுமக்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.