Header image alt text

இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பில் வவுனியாவில் ஆர்ப்பட்ட ஊர்வலங்கள்.

_vavuniyaஇந்திய வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் வவுனியா மாவட்டத்தில் அதிகமாக வாழும் தமிழ் மக்களுக்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி கடந்த வாரம் வவுனியா மாவட்ட மீள்குடியேறியோர் நலன்பேணும் அமைப்பினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு எதிராகவே முஸ்லிம் மக்களினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதத்தை ஏற்படுத்தி, மீண்டுமொரு யுத்த மோதலை ஏற்படுத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தி வவனியாவில் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று திங்களன்று நடத்தப்பட்டிருக்கின்றது. இந்திய வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என மூவினங்களிலுமிருந்தும் தெரிவு செய்யப்பட்டிருந்தபோதிலும், அமைச்சரினால் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படவில்லை என இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இனவாதத்தைத் தூண்டுவதாகக் குறிப்பிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குறிக்கும் உருவம் ஒன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களினால் ஏந்திச் செல்லப்பட்டு தீயிடப்பட்டது. இந்திய வீட்டுத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அத்தகைய முயற்சிக்கு இடம்கொடுக்கக் கூடாதென்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தக் கோரிக்கை அடங்கிய மகஜரை, ஜனாதிபதி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சரஸ்வதி மோகநாதனிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த முக்கியஸ்தர்கள் கையளித்தனர்.

vavniyaபாதிக்கப்பட்ட குடும்பங்கள் கடந்த 29-ம் திகதி வவுனியாவில் நடத்திய ஆர்ப்பாட்டம் இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 10,209 தமிழ் குடும்பங்ளுக்கு வீடுகள் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளபோதிலும், 1,938 குடும்பங்கள் மட்டுமே இந்திய வீட்டுத் திட்டத்தின் மூன்று கட்டங்களிலும் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா மாவட்ட மீள்குடியேறியோர் நலன்பேணும் அமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது. அதேநேரம், இந்த மாவட்டத்தில் 773 சிங்கள குடும்பங்களுக்கு வீடுகள் தேவையென மதிப்பிடப்பட்டு 545 குடும்பங்கள் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் முஸ்லிம் குடும்பங்களைப் பொறுத்தமட்டில் 1,483 குடும்பங்களுக்கு வீடுகள் தேவையென மதிப்பிடப்பட்டு, 1634 குடும்பங்கள் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதன் மூலம் இந்த மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்கள் அரசியல் பழிவாங்கல் நோக்கிலும் அரசியல் இலாபம் கருதியும் இந்திய வீட்டுத் திட்டத்தில் பாகுபாடாக நடத்தப்பட்டிருக்கின்றார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரா.சம்பந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்து-

imagesCAEVMZZHஜனாதிபதி இன்று (05.02.2014) தனது 81ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கட்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ள சம்பந்தன் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ள ஜனாதிபதி, வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, மருத்து சிகிச்சைகளை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் இருவரும் சந்தித்து கலந்துரையாட வேண்டும் என்று தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சுதந்திர தினத்தில் கொடியேற்றியவர் மீது தாக்குதல்-யாழில் 66ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக தனது சுயதொழில் நிலையத்தில் தேசியக் கொடியினை ஏற்றிய நிலையத்தின் உரிமையாளரான அராலி தெற்கை சேர்ந்த 56 வயதான  தம்பிப்பிள்ளை மகேந்திரராசா மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் படுகாயமடைந்த உரிமையாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும். இவர் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் ‘ஏன் தேசியக் கொடியை ஏற்றினாய்’, ‘நீ ஆமி, பொலிஸுடன் சேர்ந்தால் பெரிய கொம்பனா?’ என கேட்டு தன்னை அடித்ததாக குறித்தநபர் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.சத்துருசிங்க தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்க இராஜினாமா

raviஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனு குழுவிலிருந்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இராஜினாமா செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட சர்ச்சையினை அடுத்தே ரவி கருணாநாயக்க இராஜினாமா செய்துள்ளதகாவும். கொழும்புக்கு வெளியிலுள்ள நபரொருவரை மாகாண சபை தேர்தலில் போட்டியிடவதற்கு அனுமதிக்கப்பட்டமையே இதற்கான காரணம் என தெரியவருகின்றது.

வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு சஜித் பிரேமதாஸவிற்கு அனுமதி மறுப்பு.

untitledஅம்பாந்தேர்ட்டை ருஹூணு மாகம்புர நிர்வாகக் கட்டிடத் தொகுதியிலுள்ள அம்பாந்தோட்டை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தெரிவத்தாட்சி அலுவலகர் ஆர்.சீ.த.சொய்சாவிடம் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைமை வேட்பாளர்களினால் வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக வேட்புமனுவினை தாக்கல் செய்ய அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ வருகை தந்திருந்தார். எனினும் அவர் உள்ளே செல்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அவர் தெரிவத்தாட்சி அலுவலருடன் தொடர்புகொண்டபோதும் முயற்சி பலனளிக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை வேட்பாளரினால் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தென் மாகாண சபைத் தேர்தலுக்காக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய  கட்சி, ஜனநாயக கட்சி, மக்கள் விடுதலை முன்னனி மற்றும் நாட்டுப்பற்றுள்ள சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள்  வேட்புமனுக்களை தாக்கல் செய்தன. அத்துடன் சுயேட்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் இன்று நண்பகலுடன் முடிவடைகின்ற நிலையில் மூன்று சுயேட்சை குழுக்கள் மாத்திரமே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர்

Bill-Gates-Satya-Nadella-newsசிறுவயதில் இருந்து கணினி மென்பொருள் துறையில் சுய விடாமுயர்ச்சியினால் முன்னேறி வெற்றி வாகை சூடி உலகக் கோடீஸ்வரர் எனப் பெயர்பெற்ற மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ் தனது பதவியை இன்று இராஜினாமா செய்தார். இதேவேளை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சத்யா நடேலா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். Read more