இரா.சம்பந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்து-

imagesCAEVMZZHஜனாதிபதி இன்று (05.02.2014) தனது 81ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கட்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ள சம்பந்தன் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ள ஜனாதிபதி, வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, மருத்து சிகிச்சைகளை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் இருவரும் சந்தித்து கலந்துரையாட வேண்டும் என்று தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சுதந்திர தினத்தில் கொடியேற்றியவர் மீது தாக்குதல்-யாழில் 66ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக தனது சுயதொழில் நிலையத்தில் தேசியக் கொடியினை ஏற்றிய நிலையத்தின் உரிமையாளரான அராலி தெற்கை சேர்ந்த 56 வயதான  தம்பிப்பிள்ளை மகேந்திரராசா மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் படுகாயமடைந்த உரிமையாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும். இவர் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் ‘ஏன் தேசியக் கொடியை ஏற்றினாய்’, ‘நீ ஆமி, பொலிஸுடன் சேர்ந்தால் பெரிய கொம்பனா?’ என கேட்டு தன்னை அடித்ததாக குறித்தநபர் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.சத்துருசிங்க தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்க இராஜினாமா

raviஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனு குழுவிலிருந்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இராஜினாமா செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட சர்ச்சையினை அடுத்தே ரவி கருணாநாயக்க இராஜினாமா செய்துள்ளதகாவும். கொழும்புக்கு வெளியிலுள்ள நபரொருவரை மாகாண சபை தேர்தலில் போட்டியிடவதற்கு அனுமதிக்கப்பட்டமையே இதற்கான காரணம் என தெரியவருகின்றது.

வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு சஜித் பிரேமதாஸவிற்கு அனுமதி மறுப்பு.

untitledஅம்பாந்தேர்ட்டை ருஹூணு மாகம்புர நிர்வாகக் கட்டிடத் தொகுதியிலுள்ள அம்பாந்தோட்டை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தெரிவத்தாட்சி அலுவலகர் ஆர்.சீ.த.சொய்சாவிடம் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைமை வேட்பாளர்களினால் வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக வேட்புமனுவினை தாக்கல் செய்ய அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ வருகை தந்திருந்தார். எனினும் அவர் உள்ளே செல்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அவர் தெரிவத்தாட்சி அலுவலருடன் தொடர்புகொண்டபோதும் முயற்சி பலனளிக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை வேட்பாளரினால் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தென் மாகாண சபைத் தேர்தலுக்காக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய  கட்சி, ஜனநாயக கட்சி, மக்கள் விடுதலை முன்னனி மற்றும் நாட்டுப்பற்றுள்ள சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள்  வேட்புமனுக்களை தாக்கல் செய்தன. அத்துடன் சுயேட்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் இன்று நண்பகலுடன் முடிவடைகின்ற நிலையில் மூன்று சுயேட்சை குழுக்கள் மாத்திரமே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர்

Bill-Gates-Satya-Nadella-newsசிறுவயதில் இருந்து கணினி மென்பொருள் துறையில் சுய விடாமுயர்ச்சியினால் முன்னேறி வெற்றி வாகை சூடி உலகக் கோடீஸ்வரர் எனப் பெயர்பெற்ற மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ் தனது பதவியை இன்று இராஜினாமா செய்தார். இதேவேளை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சத்யா நடேலா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடமையாற்றிய ஸ்டீவ் போல்மர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். இதனையடுத்து அப்பதவிக்கான நபரை தேர்வு செய்ய மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒரு சிறப்புக்குழுவை அமைத்தது. இதனையடுத்து தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் பட்டியலில் சத்யா சத்யா நடேலா , விக் குண்டோத்ரா ஆகிய இந்தியர்கள் உட்பட 9 பேர் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இதில், அனுபவம் மிக்க அதிகாரியாக இருந்த சத்யாவை புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்து நியமித்திருப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை  மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்த பில் கேட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக தன் பணியை தொடர உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.  நிறுவனத்தின் 38 ஆண்டு கால வரலாற்றில் போல்மர் மற்றும் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோரைத் தொடர்ந்து சத்யா மூன்றாவது தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.