வட மாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குடிதண்ணீர் வசதி வழங்கிவைப்பு-
யாழ். மல்லாகம் கோட்டக்காடு சைவ வாலிப சங்க முன்பள்ளிக்கு குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் செய்து கொடுத்துள்ளார். வசதியற்றோரின் சிறார்களது கல்வி வளர்ச்சிக்கு ‘தமது வடமாகாண சபை ஊதியத்தில் இருந்து’ உதவி செய்யும் திட்டத்தின் ஓர் பகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மல்லாகம் கோட்டக்காடு சைவ வாலிப சங்க தலைவர் ராஜாராம், வரவேற்புரை நிகழ்த்தியதுடன், செயலாளர் தசரதன் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் வடமாகாண சபை முதலாவது அமர்வின்போது திரு. சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்ததுக்கு அமைய தனது வடமாகாண சபை சம்பளத்தில் இதுபோன்ற உதவியை வழங்கியமையிட்டு பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.